Skip to main content

மகள் கல்லூரியில் சேர முடியாததால் தாய் தற்கொலை முயற்சி

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

student and her mother tried set fire college campus

 

விழுப்புரம் நகரில் உள்ள எம்.ஜி.ஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி, பி.ஏ, பி.காம் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளிலும் சேர விரும்பும் மாணவிகளால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டு தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 

 

இந்த நிலையில் கொண்டங்கி என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரவீனா என்ற மாணவியின் தாய் தமிழ்ச்செல்வி மற்றும் அவரது தாய்மாமன் ஸ்ரீதர் ஆகியோர் நேற்று கல்லூரி அலுவலகம் முன்பு தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சி செய்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தற்கொலை முயற்சியில் இருந்து மீட்டனர். இதுகுறித்து மாணவியின் தாய் தமிழ்ச்செல்வி போலீசாரிடம் கூறுகையில், “என் மகள் பிரவீனா, பிளஸ் டூ பாடத்திட்டத்தில் 331 மதிப்பெண் பெற்றுள்ளார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த எனது மகளுக்கு இட ஒதுக்கீட்டின் படி சீட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கை அடிப்படையில் விழுப்புரத்தில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், மற்றும் திருவெண்ணைநல்லூரில் உள்ள அரசு கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தோம். எந்தக் கல்லூரியிலிருந்தும் சேர்க்கைக்கான அழைப்பு வரவில்லை. விழுப்புரத்தில் உள்ள எம்ஜிஆர் கல்லூரியில் சீட்டு கேட்டு ஒரு மாதமாக அலைகிறோம்.  இதோ, அதோ என்று எங்களை அலைக்கழிக்க விட்டனர். இறுதியில் என் மகளுக்கு சீட்டு இல்லை என்கிறார்கள்.

 

ஆனால், என் மகளை விட குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. மெரிட் அடிப்படையில் பலருக்கும் சீட்டு ஒதுக்கப்படவில்லை. விருப்பு வெறுப்பு அடிப்படையில் சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.” என்று குற்றம் சாட்டினார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் விவரம் கேட்டபோது, “அரசு அனுமதி அளித்த இடங்கள் முழுவதும் நிரப்பப்பட்டு விட்டன. கூடுதல் இடங்கள் ஒதுக்குமாறு கேட்டு உயர் கல்வித்துறைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளோம். அனுமதி கிடைத்தால் அந்த இடத்திற்கு சேர்க்கை நடத்தப்படும்” எனக் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

இதையடுத்து மாணவியின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அரசு கலைக் கல்லூரியில் சீட்டு கிடைக்காத காரணத்தினால் மாணவி ஒருவரின் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் விழுப்புரம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.