Skip to main content

மத்திய சிறையில் பெண் ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம் 

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

The Struggle of the woman teacher in the Central Jail

 

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் தையல் ஆசிரியை ஒருவர், 'போக்சோ' தண்டனை கைதியால் கொடூரமாக மானபங்கம் செய்யப்பட்டதை, சிறை அதிகாரிகள் மூடி மறைத்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சிறைகளில் தண்டனைக் கைதியாக உள்ளவர்கள் படிப்பதற்காக திருச்சி மத்திய சிறையில் ஐ.டி.ஐ. செயல்படுகிறது.

 

கோவை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற திருமூர்த்தி (25) என்பவர், உட்பட 35 தண்டனை கைதிகள், திருச்சி மத்திய சிறையில் தங்கி தையல் படிக்கின்றனர். அவர்களுக்கு 45 வயதுடைய தையல் ஆசிரியை வகுப்பு நடத்தி வருகிறார். 1 ஆம் தேதி காலையில் நடந்த வகுப்பிற்கு பின், பகல் 11:45 மணிக்கு கைதிகள் சாப்பிடச் சென்றனர். கைதி திருமூர்த்தி சாப்பாட்டை முடித்து முன்னதாகவே வகுப்பறைக்கு வந்தார். அங்கு தனியாக இருந்த ஆசிரியையின் வாயில் துணியை அடைத்து சத்தம் போடவிடாமல் செய்தார்.

 

அதன்பின் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அவரைக் கடித்தும், நகங்களாலும் காயங்களை ஏற்படுத்தினார். அதிர்ச்சியடைந்த ஆசிரியை, திருமூர்த்தியிடம் இருந்து விடுபட்டு, தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அங்கிருந்த கத்தரிக்கோலை எடுத்து, 'குத்தி விடுவேன்' என மிரட்டினார்.

 

அந்த கைதி ஆசிரியையை விட்டு, குளியல் அறையில் ஒளிந்து கொண்டார். இது குறித்து, சிறைத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கச் சென்ற ஆசிரியையிடம், திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், 'இதனால் உங்களுக்குத்தான் கெட்ட பெயர், அசிங்கம். அப்படியே விட்டுவிடுங்கள்' என மிரட்டல் தொனியில் கூறினார். அங்குள்ள பெண் அதிகாரியும் ஆசிரியைக்கு ஆறுதல் கூறாமல், புகார் கொடுக்கக் கூடாது என்பது போல மிரட்டினார். இதனால் மனமுடைந்த ஆசிரியை அங்கிருந்து சென்றிருக்கிறார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

நாய் கடித்ததில் படுகாயம்; 4 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

4-year-old girl was admitted to hospital after being bitten by dogs near Manaparai

 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீ.பூசாரிபட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான வடிவேல் என்பவரது 4 வயது சிறுமி, தன்னுடைய வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. அப்போது அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த நாய்கள் சிறுமியைக் கடித்துக் குதறவே சிறுமி‌ சப்தம் போட்டுள்ளார். உடனே குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு பார்த்தபோது வலது மார்பில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. 

 

இதனையடுத்து உடனடியாகச் சிறுமியை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித் திரிவதும் பொதுமக்களையும்‌ கோழி மற்றும் கால்நடைகளையும் கடித்து மக்கள் பாதிக்கப்படும் சம்பவமும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றது. சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை இனியும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் இதேபோல் சம்பவத்தால் பலரும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

2017ல் நடந்த பயங்கர கொலை! - தீர்ப்பளித்த நீதிமன்றம்! 

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Trichy court sentence for accused

 

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடந்த 2017ம் ஆண்டு தாய், மகனை அடித்து இரட்டைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ.13,000 அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் தனது மனைவி தனபாபு மற்றும் மகன் சத்தியமூர்த்தி ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், அதே ஊரில் வசித்து வந்த தனபாபுவின் அண்ணன் ராமசாமி பஞ்சாயத்து தலைவராக இருக்கும்போது, தேர்தல் செலவுக்காக தனபாபு ஒரு லட்சம் பணம் வெளியில் கடன் வாங்கிக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் இவர்களைக் கொலை செய்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு ராமசாமி இறந்துவிட்டார்.

 

இதனால், தனபாபு மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் ராமசாமி மகன் ராஜகோபால் என்பவரிடம் கொடுத்த பணத்தைக் கேட்டபோது, இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு முன் விரோதமாக இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி அதிகாலை சுமார் 3.30 மணிக்கு ராஜகோபால் என்பவர், சத்தியமூர்த்தி வீட்டுக்குச் சென்று ஒரு கனமான ஆயுதத்தால், தூங்கிக் கொண்டிருந்த தனபாபு மற்றும் சத்தியமூர்த்தி தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார்.

 

பின்பு அவர்களை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து வீட்டு வாசலில் உள்ள மண் ரோட்டில் போட்டுவிட்டு தனது டாக்டரை அவர்கள் மீது ஏற்றி விபத்தில் இறந்ததுபோல் செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து கல்லக்குடி போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 

பின்னர் இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி செல்வ முத்துக்குமாரி தீர்ப்பளித்தார். அதில் தாய், மகன் என இரட்டைக் கொலை செய்த ராஜகோபாலுக்கு இரண்டு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 13000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்