Skip to main content

“கோவில் ஊழியர்களை இடமாற்றம் செய்யாவிடில் போராட்டம் நடத்தப்படும்” ஊராட்சிமன்ற தலைவர் கடிதம்!

Published on 21/08/2020 | Edited on 21/08/2020
“Struggle will continue if temple staff are not relocated” says Panchayat President

 

கடலூர் மாவட்டம் விருதாசலத்தை அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்திபெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. கடந்த 5 மாதங்களாக கரோனா ஊரடங்கால்  கோவில் பூட்டப்பட்டுள்ளது. அதே சமயம் கோவில் குருக்கள் சுவாமிகளுக்கு பூஜைகள் செய்து, வழிபாட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் வளாக நந்தவனத்தில் அமர்ந்து கோவில் ஊழியர்கள் மது குடிப்பதும், மாமிசம் சாப்பிடுவதும், இயற்கை உபாதைகள் கழிப்பதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. அதையடுத்து கோவில் பொறுப்பு மேலாளர் சிவராஜன், காவலர் சிவக்குமார் ஆகிய இருவரையும் இந்து அறநிலையத்துறை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்தது. இதனிடையே கோவிலின் மற்றொரு ஊழியரான ஆனந்தகுமார் மற்றொரு தரப்பினர் குறித்து வசைபாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்தநிலையில் கொளஞ்சியப்பர் கோவில் ஊழியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மணவாளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் தியாக.நீதிராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, "மணவாளநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொளஞ்சியப்பர் கோவிலில் சமீப காலமாக தொடர்ந்து ஊழியர்கள் கோவில் நிர்வாகத்திற்கும்,  பாரம்பரியமிக்க கோயிலுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதனை சரி செய்யும் நோக்கத்தோடு கோவில் நிர்வாகத்தில் ஊழல் இல்லாமல், கோவில் பக்தர்கள் அதிர்ச்சி அடையாமல் இருக்கவும் அரசு விதிப்படி தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்களை உடனடியாக பணியிடை மாற்றம் செய்து புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

 

“Struggle will continue if temple staff are not relocated” says Panchayat President


  
மேலும் இதுபோன்ற செயல்களை தவிர்க்கும் பொருட்டு பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராம மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்'  என அதில் கூறப்பட்டுள்ளது.

 

இந்த மனு கடலூர் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

ரூ. 1 கோடி பறிமுதல்; ஊராட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Rs. 1 crore confiscation; Case registered against panchayat chairman

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் மாவட்டம் எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா வீட்டில் ரூ.1 கோடி நேற்று (12.04.2024) தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி தொடர்பாக வருமான வரித்துறை விசாரித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து திவ்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 கோடி யார் மூலம் வந்தது என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா அதிமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.