Skip to main content

விண்ணை முட்டும் விவகாரம்... சங்கரன்கோவிலை தலைமையிடமாக்க வேண்டி போராட்டம்!

Published on 11/09/2019 | Edited on 11/09/2019

நெல்லையை இரண்டாகப் பிரித்து தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நேரமோ என்னமோ விவகாரங்கள் பல்நோக்கு வழிகளில் பயணிக்கத் தொடங்கியுள்ளன. காரணம் பிரச்சனைக்கான முடிவு எட்டப்படாததே என்கிறார்கள்.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வளமானது தென்காசி உட்பட மூன்று தொகுதிகள். அதேசமயம் அதன் கீழ்புறம் சுமார் 42 கி.மீ. சதுர பரப்பளவு கொண்ட சங்கரன்கோவில் தொகுதி வறட்சி மேயும் ஏரியா. வறண்ட பூமியான இதற்கு பலவகையில் பெற வேண்டிய நிவாரணங்கள், பெற முடியரமல் போய்விடும் என்று தொகுதியின், திருவேங்கடம் தாலுகா, குருவிகுளம் உள்ளிட்ட பிற யூனியனின் மக்கள் முக்கியப் பிரமுகர்கள், எதிர்ப்பு தெரிவித்ததோடு பல்வேறு நலன் காரணமாக சங்கரன்கோவில், நெல்லையிலேயே நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆணையத்திடம் வைத்தார்கள். அதேசமயம் சங்கரன்கோவில் தொகுதி மக்களின் கல்வி, போக்குவரத்து, மருத்துவம், வறட்சி போன்ற அனைத்துப் பிரச்சனைகளையும் முன் வைத்து தொகுதிவாசியான வைகோ, அரசு வரை கொண்டு போனார். நெல்லையுடன், சங்கரன்கோவில் இணைந்தே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

Struggle to make Sankarankovil headquarters!


இதனிடையே புதிய மாவட்டமான தென்காசி, சங்கரன்கோவிலை உள்ளடக்கிய வரையரைக் கோப்பும், அது தவிர்த்து வரையறுக்கப்பட்ட கோப்பு உள்பட இரண்டு விதமான கோப்புகள் அரசுக்குப் போயிருப்பதாகவும் தகவல்கள் றெக்கை கட்டுகின்றன.

 

Struggle to make Sankarankovil headquarters!

 

இத்தருணத்தில், சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக தனிமாவட்டம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் கோரிக்கை இயக்க ஒருங்கிணைப்பு குழுவினரான வியாபாரிகள் சங்க தலைவர் முத்தையா செயலர் குருநாதன், மனோகர், அரசமணி ஆறுமுகச்சாமி உள்ளிட்டோர் அமைச்சர் ராஜலட்சுமியிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்ததுடன் வரும் 17ம் தேதி இதனை வலியுறுத்தி தொகுதி முழுக்க கடையடைப்பு போராட்டமும் அறிவித்துள்ளனர்.

 

Struggle to make Sankarankovil headquarters!


1784களில் சங்கரன்கோவில் பகுதியான நெல்கட்டும் செவல் பாளையத்தை ஆண்ட மாமன்னன் பூலித்தேவன் வெள்ளையருக்கு வரியாக ஒரு குன்று மணி நெல் கூடத் தரமாட்டேன் என்று சுதந்திரத்திற்காக முதல் குரலிட்ட மூத்த மன்னனே பூலித்தேவன், மற்றவர்கள் எல்லாம் அவர் அடியொற்றி வந்தவர்களே. அப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்ட மன்னன் ஆண்ட பூமி சங்கரன்கோவில் பகுதி. அதோடு தென்காசி மேற்கு, முனையிலமைந்துள்ளது, வடமுனை, மற்றும் கீழ்முனைப் பகுதி மக்கள் தென்காசியை அடைய நீண்ட நேரம் பிடிக்கும். ஆனால் குறிப்பில் அடங்கிய தொகுதிகளுக்கு மத்தியில் அமையப் பெற்றது சங்கரன்கோவில். வரையறுக்கப்பட்ட பகுதிகளின் அனைத்து மக்களும் வந்துசேரும் காலமும் குறைவு. எனவே மக்கள் நலன் பொருட்டு சங்கரன்கோவிலை தலைமையிடமாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

காலதாமதம். பிரச்சனைகளைப் பல் நோக்கு வழிகளில் பயணிக்கச் செய்து விடும். தேசத்தை ஆண்ட பிரதமர் இந்திராகாந்தி காலத்தில் சொல்லப்பட்ட வரிகள் இவைகள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

'எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனேஜர் என்றே தெரியாது'-மழுப்பிய நயினார் நாகேந்திரன்

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டி ஏ-1 26, 27, 28 ஆகிய இருக்கைகளில் நயினார் நாகேந்திரன் கோட்டாவில் அவர்கள் பயணித்தது தெரியவந்தது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

nn

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய ஆதரவாளர் கணேஷ்மணி என்பவர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது. வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 வேட்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மது பாட்டில்களும் சிக்கியதாக பறக்கும் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நயினார் நாகேந்திரன் தங்கும் ஹோட்டல் அறையிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை புரசைவாக்கம் ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் அவர் தங்கும் அறையிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. நாகேந்திரனுக்கு தொடர்புடைய வண்ணாரப்பேட்டையில் உள்ள லட்சுமி காயத்ரி ஹோட்டல் உரிமையாளர் குணசேகரன் வீட்டிலும் 3.72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் மட்டுமின்றி ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் திமுகவும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிட நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், 'எனக்கு வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க அவரவர்கள் தொழிலுக்காக பணத்தை வைத்திருப்பார்கள். எனக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனஜர் என்றே தெரியாது' என பதிலளித்துள்ளார்.