Skip to main content

சிதம்பரத்தில் சிபிஎம் ரயில் மறியல் போராட்டம்!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
struggle in CPM trains Chidambaram!

சிதம்பரம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை - கோவை  சதாப்தி ரயில் சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். மயிலாடுதுறை - மைசூர் ரயில் சிதம்பரம் வழியாக கடலூர் சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும். சிதம்பரம் ரயில் நிலையத்தில் சாரதா - சேது மற்றும் கம்பன் ரயில்கள் நின்று செல்ல வேண்டும். விழுப்புரம் - மயிலாடுதுறை தடத்தை இரட்டை ரயில் பாதையாக மாற்றம் செய்ய வேண்டும். ரயில் நிலையத்தில் லிஃப்ட் வசதி ஏற்படுத்த வேண்டும்.

சிதம்பரம் வழியாக இயக்கப்பட்ட தாம்பரம் செங்கோட்டை ரயில் தற்போது மயிலாடுதுறை வரை மட்டுமே இயங்குகிறது. இதனை மீண்டும் தாம்பரத்தில் இருந்து இயக்க வேண்டும். ரயில் நிலைய நடைமேடைகளுக்கு பயன்படுத்தப்படும் மேம்பாலம் மூன்றாவது நடைமேடை வரையில் மட்டுமே உள்ளது. இதனால் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவ, மாணவிகள் மூன்றாவது நடைமேடை ரயில் வழி இருப்பு பாதையில் கீழ் இறங்கி நடந்து செல்ல வேண்டிய சிரமம் உள்ளது. மேம்பாலத்தினை கிழக்குப் பகுதி வரை நீட்டிக்க வேண்டும். ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த பார்சல் புக்கிங் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும். திருச்செந்தூர், பாமணி & மீனாட்சி விரைவு ரயில்கள் பரங்கிப்பேட்டையில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட வந்தனர். 

அப்போது ரயில் நிலையம் நுழைவு வாயில் முன்பு  சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பி.ரகுபதி  தலைமையில் காவல்தறையினர்  கம்யூனிஸ்ட் கட்சியினரை தடுத்து நிறுத்தினர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரயில் வரும்போது 10 பேரை மட்டும் நடைமேடை வரை அனுமதித்தனர். அவர்கள் மத்திய மோடி அரசையும் ரயில்வே நிர்வாகத்தையும் கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்தும், நிறைவேற்றக்கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.  இதற்கு ஆதரவு தெரிவித்த ரயில் பயணிகள் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டவர்களை  காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் சிதம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு, முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் மூசா,  நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், சிபிஎம் நகர்குழு உறுப்பினர்கள்,  ரயில் பயணிகள் நல சங்கம் அப்துல் ரியாஸ், ஏ.சிவராம வீரப்பன், அம்பிகாபதி, பரங்கிப்பேட்டை ரயில் பயணிகள் சங்க அருள்முருகன், இந்திய மாணவர்சங்க செயற்குழு உறுப்பினர் சௌமியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.