Skip to main content

டாக்டர் சுரேஷ்பாபு மீது அவதூறு செய்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!-கலெக்டர் விஜயலட்சுமி எச்சரிக்கை!!

Published on 31/07/2020 | Edited on 01/08/2020

 

Strict action will be taken against those who spread slanderous news about Dr. Sureshbabu! -Collector Vijayalakshmi warns !!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இப்படி கரோனா தொற்றால் பாதிக்கப்படும் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை, எம்.வி.எம். மகளிர் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தனியார் மருத்துவமனைகளான ராஜராஜேஸ்வரி மருத்துவமனை, காட் மருத்துவமனை உள்பட சில மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியும் அந்தந்த மையங்களுக்குச் சென்று ஆய்வு செய்து கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நலம் விசாரித்துத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்.

இந்த நிலையில திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளராக இருந்து வரும் டாக்டர் சுரேஷ் பாபு அரசு மருந்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சையளித்து வந்ததன் மூலம் பலர் குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள். அந்த அளவுக்கு தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மனிதாபிமான அடிப்படையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்த நிலையில்தான் திடீரென டாக்டர் சுரேஷ் பாபுவுக்கும் கரோனா பரவியது. இதனால் உடனே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருபவர், விரைவில் பூரண நலம்பெறும் நிலையில் இருக்கிறார்.

 

Strict action will be taken against those who spread slanderous news about Dr. Sureshbabu! -Collector Vijayalakshmi warns !!


அப்படி இருக்கும்போது சில விஷமிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டாக்டர் சுரேஷ்பாபு உடல்நிலை குறித்துத் தவறான செய்திகளைச் சமூக வலைத்தளங்களில் பரப்பி  வந்தனர். அதைக் கண்டு டாக்டர் சுரேஷ்பாபு மனம் நொந்து போய்விட்டார். உடனே இந்த விஷயத்தை கலெக்டர் விஜயலட்சுமியின் காதுக்கு கொண்டு சென்றார் ஜே.டி. சிவகுமார். அதைக் கேட்டு மனம் நொந்து போன கலெக்டர், உடனே பி.ஆர்.ஓவை தொடர்பு கொண்டு டாக்டர் சுரேஷ் பாபு நல்ல முறையில் இருந்து வருகிறார், அப்படி இருக்கும்போது அவர்மீது அவதூறு பரப்பும் விஷமிகள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். அதன்படி, பி.ஆர்.ஓவும் பத்திரிகைகளுக்கு கலெக்டரின் எச்சரிக்கையைச் செய்தியாக கொடுத்து உள்ளார்.

 

டாக்டர் சுரேஷ்பாபு எப்பொழுதுமே அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அன்பாகப் பேசி மருத்துவம் பார்க்கக் கூடியவர். பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களிடமும் டாக்டர் சுரேஷ்பாபு நல்ல பெயர் எடுத்து வருகிறார். அப்படிப்பட்டவர் கரோனாவில் இருந்து மீண்டு வரப்போகும் நாளுக்காக அனைத்துத் தரப்பு மக்களும் காத்திருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார். 

Next Story

“திண்டுக்கல் தொகுதி இந்திய அளவில் முதலிடத்தில் வரவேண்டும்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
"Dindigul Constituency should come first in India" Minister Chakrapani

திண்டுக்கல் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆர். சச்சிதானந்தத்தை ஆதரித்து ஒட்டன்சத்திரம் தொகுதிக்குப்பட்ட அரங்கநாதபுரம், லெக்கையன்கோட்டை, சாலைபுதூர் சத்தியநாதபுரம், கே. அத்திகோம்பை, காளாஞ்சிபட்டி வெரியபூர், பழையபட்டி, திப்பம்பட்டி, கேதையூறும்பு, புலியூர்நத்தம், பி.என். கல்லுப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, குளிப்பட்டி, ஜவ்வாது பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் சிலிண்டர் ரூ.5 00க்கும், பெட்ரோல் ரூ. 75க்கும், டீசல் ரூ.65க்கும் வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட சம்பளம்  ரூ. 400 ஆக உயர்த்தப்படும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி எம்.பி. வேலுச்சாமி, 5 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று தமிழகத்தில் முதல் இடத்தையும், இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இந்த தேர்தலில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்குகளை பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்ற தொகுதியாக திண்டுக்கல் தொகுதி இடம் பெற வேண்டும்” என்று பேசினார்.