Skip to main content

கடலில் கண்டெடுக்கப்பட்ட விநோத கல்; சிதம்பரத்தில் அதிசயம்   

Published on 02/11/2022 | Edited on 02/11/2022

 

strange stone found sea

 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த குமார் என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொடியம்பாளையம் கடற்கரைப் பகுதிக்கு அவருடைய நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது கடலில் உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென பாறை போன்ற ஒரு பொருள் குமாருக்குத் தென்பட்டுள்ளது. அதை எடுத்துப் பார்க்கும்போது வித்தியாசமாகத் தெரிந்ததால் அதைத் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். 

 

சிறிது நாட்கள் கழித்து வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த குமார், அந்தப் பொருளைத் தூக்கி வெளியே போட்டுள்ளார். அப்போது, தண்ணீரில் விழுந்த அந்த கல் போன்ற பொருள் மிதந்து மேலே வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குமார், அதைத் தூக்கி வந்து எடை போட்டு பார்த்ததில் 1 கிலோ 200 கிராம் இருந்துள்ளது.

 

இதனையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி முத்துக்குமார் என்பவரிடம் அந்த மிதக்கும் கல்லைக் கொடுத்துள்ளார். மிதக்கும் கல்லைப் பார்த்த முத்துக்குமார் மீடியாவில் செய்தி வெளியிட்டார். இந்நிலையில், புராணக் கதைகளில் பேசப்பட்டு வந்த மிதக்கும் கல் குறித்த செய்தி சோசியல் மீடியா முழுவதும் வேகமாகப் பரவியது.

 

இது குறித்துத் தகவலறிந்த வனத்துறையினர் இன்று காலை முத்துக்குமாரின் கடைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது வனத்துறை அதிகாரிகள் பேசும்போது “இந்த மிதக்கும் கல் குமிழி என்ற கல் வகையைச் சேர்ந்ததாகக் கூட இருக்கலாம். அப்படி இல்லையென்றால் திமிங்கலத்தின் எச்சிலாகக் கூட இருக்கலாம் என்று  தகவல் பரவியது. ஆனால், இந்த நவீன யுகத்தில் வீடு கட்டுவதற்குக் கூட இந்த மிதக்கும் கல்லைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் எதுவாக இருந்தாலும் இந்த மிதக்கும் கல்லை ஆய்வு செய்த பிறகுதான் முழுமையான தகவல் வெளியிட முடியும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.