Skip to main content

நீதிமன்றத்தின் வித்தியாசமான ஜாமீன் உத்தரவு!

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

Strange bail order of the court!

 

கடலூர் மாவட்டம், வடலூரைச் சேர்ந்த ஜான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வடலூர் அருகில் உள்ள கீழ் வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த தீபன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரு மாணவர்களும் நெய்வேலி வட்டம் 4ல் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்கள். கடந்த 6ஆம் தேதி பள்ளியை விட்டு வெளியே வரும்போது மேற்குறிப்பிட்டுள்ள இரு மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் தீபனுக்கு ஆதரவாக நெய்வேலியைச் சேர்ந்த கல்லூரி படிக்கும் இளைஞர்கள் ரகுபதி, அருண் சித்தார்த், மதிவதனன், ஆனந்த், ஆகியோர் தீபனுடன் சேர்ந்து கொண்டு உருட்டுக்கட்டையால் ஜானை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ஜானை மீட்டு அங்கிருந்தவர்கள், கடலூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளனர். 

 

இது சம்பந்தமாக ஜானின் தந்தை, நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீபன் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், மேற்படி நால்வரும் ஜாமீன் கேட்டு நெய்வேலி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்களது மனுவை விசாரித்த நீதிபதி சுப்பையா, ‘வள்ளலார் வாழ்ந்த மண்ணில் இந்த மாணவர்களின் செயல் வருத்தத்தை தந்துள்ளது. மேற்படி நால்வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வடலூர் சத்திய ஞானசபையில் உள்ள அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும். அங்கு வள்ளலாரின் அருள் போதனைகளை கேட்க வேண்டும். அதன் பிறகு அங்கு வந்து தங்கியுள்ள முதியோர்களுக்கு சேவை செய்ய வேண்டும். இதற்கான சான்றிதழை சபையின் அதிகாரியிடமிருந்து பெற்று அதை வரும் ஏப்ரல் 1ம் தேதி இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியுள்ளார். இந்த வித்தியாசமான ஜாமீன் உத்தரவு வள்ளலார் கொள்கைகளை பரப்பி வரும் சான்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.