Skip to main content

மயிலாடுதுறையில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டி! 

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

State level Kabaddi competition held in Mayiladuthurai!

 

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக மாநில அளவிலான கபாடி போட்டியை நடத்தியுள்ளனர் திமுகவினர்.

 

மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளர் இளையபெருமாள் தலைமையில் நடந்த இந்தப் போட்டியைத் திமுக மாவட்டச் செயலாளரும், பூம்புகார் எம்.எல்.ஏ., மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமார், சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், அரசு வழக்கறிஞர் டாக்டர் சேயோன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, துவங்கிவைத்து, போட்டியைக் கண்டு ரசித்தனர். போட்டியைக் காண பல கிராமங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.

 

மூன்றுநாள் போட்டியாக நடந்த இந்தப் போட்டிக்கு முதல் பரிசு முப்பதாயிரம், மற்றும் ஐம்பதாயிரம் மதிப்புள்ள கேடயமும் வழங்கி கவுரவித்தனர். அந்தப் பரிசுகளைத் திமுக மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான இளையபெருமாள் வழங்கினார். பிரம்மாண்டமான போட்டியைக் கவுன்சிலரும் விளையாட்டு வீரரும், பயிற்சியாளருமான கராத்தே ஜெயக்குமார், கேசிங்கன் ஊராட்சிமன்றத் தலைவர் ரமேஷ், மணல்மேடு திமுக இளைஞரணியைச் சேர்ந்த ஶ்ரீநாத் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து நடத்தி முடித்துள்ளனர். 

 

State level Kabaddi competition held in Mayiladuthurai!

 

தமிழ் மண்ணில் தமிழர்களால்ள்உருவாக்கப்பட்ட வீர விளையாட்டுகளுள் ஒன்றுதான் கபாடி. இப்போது உலக நாடுகளில் பரவலாக விளையாடப்பட்டாலும் உருவான தமிழ்நாட்டில் விளிம்புநிலை மக்களின் விளையாட்டாகவே சுருங்கிவிட்டது. கபாடி போன்ற பண்பாடு, கலாச்சாரம் கலந்த வீர விளையாட்டுக்களை உயிர்ப்பிக்கும் விதமாகத்தான் தற்போது அழிவின் விளிம்பில் இருந்த சிலம்பத்தை மீட்டெடுக்கும்விதமாக தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பு செய்திருக்கிறார்.

 

கபாடி, சிலம்பம், கராத்தே என பன்முக வீரரும் பயிற்சியாளருமான மணல்மேட்டைச் சேர்ந்த சென்சாய் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேட்டோம், "கை-பிடி என்கிற வார்த்தை மறுவியே கபடியாக மாறியுள்ளதாக கருதுகிறோம். சுமார் 4000 வருடங்களுக்கு முன்பாகவே உருவாக்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க செய்யப்படும் பயிற்சிதான் இந்தக் கபடி விளையாட்டு. கபாடி பாடிவரும் ரெய்டர் என்கிற ஒற்றை ஆளைக் காளையாக கருதி, அவரை எதிரணியில் இருக்கும் ஏழு வீரர்களும் அடக்குவர். பின்னர் இந்தப் பயிற்சி, வீர விளையாட்டாக உருவெடுத்து இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகள் முழுவதும் பரவியிருக்கிறது. புத்தர் உள்ளிட்ட பல இளவரசர்கள் தங்கள் பலத்தை நிரூபிப்பதற்காக சுயம்வரங்களில் இந்த விளையாட்டை விளையாடியதாகவே கூறுகின்றனர். 

 

ஆனால் தமிழனின் அடையாளமான சிலம்பம், கபாடி போன்ற வீரவிளையாட்டுகள் அழிந்துவரும் நிலைக்குச் சென்றுவிட்டது. அதோடு விளிம்புநிலையில் வாழும் மக்கள் மட்டுமே கொண்டாடும், விளையாடும் விளையாட்டுபோலவே மாற்றிவிட்டனர். இதற்கு கிரிக்கெட் விளையாட்டும் ஒரு காரணமாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை மேல்தட்டு மக்களும், கபாடி, சிலம்பம் போன்ற விளையாட்டுகளை அடிதட்டு மக்களுக்கானதுமாகவே மாற்றிவிட்டனர். பொங்கல் விழாவின்போது ஒவ்வொரு கிராமங்களிலும் கபாடி, சிலம்ப போட்டிகள் நடக்கும். ஆனால், சமீப காலமாக காவல்துறையினரின் அனுமதியில்லாமல் முடங்கிவிட்டது. இதுவரை ஒவ்வொரு ஆண்டும் தளபதியார் பிறந்தநாளில் கபாடி போட்டி நடத்தினோம், இந்த ஆண்டு முதல் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளிலும் விழாவாக கபாடி போட்டி மிக விமரிசையாக நடத்தி முடித்துள்ளோம். மதுரை, சென்னை, திருச்சி, சேலம் என பல மாவட்டங்களில் இருந்தும் வீரர்கள் வந்து கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்று சென்றனர். இது எங்களுக்கு மிகப்பெரிய மனநிறைவைக் கொடுத்துள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் போட்டியை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

 

State level Kabaddi competition held in Mayiladuthurai!

 

அமெச்சூர் கபடி கூட்டமைப்பைச் சேர்ந்தவரும், திமுக பிரமுகரும், பல விளையாட்டு வீரர்களை உருவாக்கிவருபவருமான மயிலாடுதுறை ரஜினியிடம் கேட்டோம், "1921இல் கபடி விளையாட்டிற்கான கமிட்டி மஹாராஷ்ட்ராவில் உருவாக்கப்பட்டது. 1950இல் அனைத்திந்திய கபடி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, தேசிய அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. பின்பு 1972இல் இந்திய அமெச்சூர் கபடி கூட்டமைப்பாக மாற்றப்பட்டது. 1980இல் முதன்முதலாக ஆசிய கபடி போட்டி நடத்தப்பட்டு, இந்தியா சாம்பியன் ஆனது. முதல் கபடி உலக கோப்பை 2004இல் நடைபெற்றது. இந்தியா முதல் உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. இதுவரை இந்தியா 8 முறை உலக சாம்பியன் ஆகியுள்ளது.

 

கபடியில் இந்திய பெண்களும் சளைத்தவர்களல்ல என்பதற்குச் சான்றாக 2005இல் மகளிருக்கான ஆசிய கபடி போட்டியில் தங்கம் வென்று அசத்தினர். 2012இல் நடைபெற்ற மகளிருக்கான முதல் கபடி உலகக் கோப்பையை வென்று அசத்தினர். இதுவரை மூன்றுமுறை உலக சாம்பியன் வென்றுள்ளனர் நம் இந்திய சகோதரிகள். அனைத்து வகை கபடி போட்டிகளிலும் இந்தியர்களே ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். இன்னும் மெருகேற்றும் விதமாக தமிழக முதல்வரின் விளையாட்டு குறித்தான அடுத்தடுத்த அறிவிப்புகள் அமைந்துள்ளன. இதுபோல் ஒவ்வொரு பகுதிகளிலும் கபடி, சிலம்ப போட்டிகள் நடத்தபட வேண்டும். சிறுவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.