Skip to main content

கால்வாயில் தவறிவிழுந்த தாய், மகள் உயிரிழந்த விவகாரம்... மாநகராட்சி ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

Published on 08/12/2020 | Edited on 08/12/2020

 

State Human Rights Commission issues notice to chennai corporation commissioner


 
சென்னை மேற்கு முகப்பேர் அருகாமையில் உள்ள நொளம்பூர் பகுதியில், மதுரவாயலில் இருந்து திருப்பதி செல்லும் பைபாஸ் சாலையின் மேம்பாலத்தின் கீழ், இரண்டு பக்கமும் 3 அடி அகலத்தில், 12 அடி ஆழமுடைய சாக்கடை கால்வாய் உள்ளது.


துணிக்கடைக்குச் சென்றுவிட்டு அந்த வழியாக இரவு நேரத்தில் பைக்கில் வீடு திரும்பியபோது சரியாக, மூடப்படாத கழிவுநீர்க் கால்வாயில், கரோலின் பிரசில்லாவும், அவரது மகளும், தவறி விழுந்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், உடலை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பிவைத்தனர். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே தாய், மகள் இருவரும் உயிரிழந்தனர்.

 
இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் கூறுகையில், இது மட்டும் இல்லாமல் தொடர்ச்சியாக இந்தப் பகுதியில் விபத்து நடந்துகொண்டே இருக்கிறது. இது வரையிலும் 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அப்போதும் மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபத்து நடக்காத வகையில், மின் விளக்கு கூட அமைப்பதில்லை. இது போன்ற காரணங்களால் இங்கு, பல கொலைகளும் நடந்துள்ளது.


அதில் முக்கியமாக கை, கால் தனித்தனியாக வெட்டப்பட்டு சாக்குப்பையில் வீசிய சம்பவமும் இங்குதான் அரங்கேறியது. இதுபோன்ற சம்பவம் எப்போதும் இப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இந்த நிலையில்தான், இச்செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர், சித்தரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். மேலும், இதுகுறித்து மூன்று வாரங்களில், விளக்கம் அளிக்கும்படி, சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தன்னை தரதரவென இழுத்துச் சென்றதாக செந்தில் பாலாஜி சொன்னார்” - மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பேட்டி

Published on 15/06/2023 | Edited on 15/06/2023

 

"Senthil Balaji said that he was dragged as a standard" - Human Rights Commission member Kannadasan interviewed

 

கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமான வரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் நேற்று செந்தில் பாலாஜியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட முறையீடு, பிற்பகல் விசாரணைக்கு வந்தது. முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி மருத்துவமனை வளாகத்திற்கே சென்று விசாரணை நடத்தி 28 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

 

"Senthil Balaji said that he was dragged as a standard" - Human Rights Commission member Kannadasan interviewed

 

இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சையில் உள்ள செந்தில் பாலாஜியிடம் நேரடியாக விசாரித்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''மனித ஆணையம் தாமாக வந்தும் விசாரணை செய்யலாம். புகார்கள் வந்தாலும் விசாரணை செய்யலாம். இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் இன்று விசாரணை நடத்தினேன். அவர் அசதியுடன் காணப்பட்டதால் சிறிது நேரம் காத்திருந்து பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினேன். நெஞ்சு வலி இருப்பதால் அதிகம் பேச இயலவில்லை என செந்தில் பாலாஜி என்னிடம் கூறினார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவரே கூறினார்.

 

அமலாக்கத்துறை தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், தன்னை தரதரவென இழுத்து சென்றதால் தனக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவர் படுத்திருந்ததால் அவருடைய காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதை நான் பார்க்க முடியவில்லை'' என்றார். அப்பொழுது செய்தியாளர்கள் 'அமைச்சர் என்பதால் மட்டும் மனித உரிமை ஆணையம் சார்பில் விசாரிக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு, ''அப்படி எல்லாம் இல்ல எங்கு மனித உரிமை விதிமுறை மீறல் நடந்தாலும் நாங்கள் விசாரணை நடத்துவோம். இன்று அமைச்சரை விசாரித்ததால் ஊடகங்களில் பெரிதாக பேசுகிறீர்கள். மற்றபடி எல்லா மனித உரிமை மீறல் விவகாரங்களிலும் விசாரணை நடத்துவோம்'' என்றார்.

 

 

Next Story

கலாஷேத்ரா இயக்குநரிடம் விசாரித்த மனித உரிமைகள் ஆணையம்

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

Human Rights Commission questioned Kalashetra director

 

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து புகார் தொடர்பாக தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் டிஜிபி லத்திகா சரண் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

 

பாலியல் தொல்லை குறித்து புகார் கொடுத்த மாணவர்களை கலாஷேத்ரா நிர்வாகம் மிரட்டுவதைக் கண்டித்தும், ஓய்வு பெற்ற நீதிபதி  கண்ணன் தலைமையிலான குழுவினரின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிபத்மன் ஜாமீனில் வராமல் தடுக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்ற மூவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று (10.04.2023) கலாஷேத்ரா கல்லூரி முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

Human Rights Commission questioned Kalashetra director
எஸ்.பி. மகேஸ்வரன்

 

இந்நிலையில் மாநில மகளிர் ஆணையத்தை தொடர்ந்து இன்று மனித உரிமைகள் ஆணையமும் கலாஷேத்ரா கல்லூரியில் விசாரணையில் ஈடுபட்டது. 6 வார காலத்திற்குள் விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இன்று காலை 11.30 மணிக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் காவல்துறை எஸ்.பி. மகேஸ்வரன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் காலாஷேத்ராவில் விசாரணையை துவங்கினர். இந்த விசாரணை குழு சுமார் 1 மணி அளவில் தனது விசாரணையை நிறைவு செய்தது. இந்த ஒன்றரை மணி நேரத்தில், கலாஷேத்ரா கல்லூரி முதல்வர் பகல ராம்தாஸ், இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. 

 

Human Rights Commission questioned Kalashetra director
இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன்

 

தொடர்ந்து அடுத்த வாரம் தேர்வுகள் முடிந்த பிறகு கலாஷேத்ரா மாணவ மாணவிகளிடம் விசாரணை நடத்தப்படும் என மனித உரிமைகள் ஆணையம் தரப்பில் இருந்து தகவல் சொல்லப்படுகிறது.