Skip to main content

கருப்பில் ஆரம்பித்து வண்ணமயமாக முடிந்தது காலா- காலா படம்பார்த்த தமிழிசை மகிழ்ச்சி

Published on 07/06/2018 | Edited on 07/06/2018

 

தமிழகத்தில் பல ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்துவந்த காலா திரைப்படம் இன்று வெளியானது. காலா ரஜினியின் அரசியல் வருகையை அறிவித்தற்கு பிறகு வரும் முதல் படம் என்பதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி பல அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுவந்தது. தற்போது காலா படம் இன்று வெளியானதை தொடர்ந்து பாஜக கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காலா படத்தை இன்று தனது சகோதரகளுடன்  திரையரங்கில் திரைப்படத்தை பார்த்து ரசித்தார். பின்னர் தியேட்டர் வாயிலிலேயே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது

 

கிளீன் இந்தியா திட்டத்தை விமர்சித்த மாதிரி இருக்கிறதாக சொல்வது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல திரைப்படத்தையும் எதார்த்த உண்மையையும் இணைத்து பார்ப்பதால் பிரிவினைதான் வரும். நான் ஒன்றை மட்டும்தான் கவனித்தேன் கருப்பில் ஆரம்பித்து இறுதியில் வண்ணமையமாக முடிந்தது அதேபோல் எல்லோர் வாழ்க்கையும் வண்ணமயமாக இருக்கவேண்டும் என்பதே என் ஆசை


 

tamilisai

அரசியல் வேறு திரைப்படம் வேறு அவர் ஒரு நடிகராக இருந்துதான் அரசியலுக்கு வருகிறார். அதேபோல் பல நடிகர்கள் அரசியலுக்கு வந்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். எனவே அவர் அரசியல் பேசுவது அவரது சொந்த கருத்து. அதேபோல் அவர் நடிகர் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே. இப்போது மட்டுலமல்ல இதற்கு முன் வந்த நிறைய ரஜினி படங்களில் அரசியல் கருத்துக்கள் வந்துகொண்டே இருக்கிறது அதனால் அதையெல்லம் பெரியதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

 

எனக்கு காதல் கதைகள் ஆடல்,பாடல் போன்றவை உள்ள கதைகளை விட சமூக அக்கறை கொண்ட படங்கள் எனக்கு பிடிக்கும் எனவே இந்த படம் சமூக கருத்துகொண்ட படம் என்று கேள்விப்பட்டேன் அதனால் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த திரைப்படத்திற்கு வந்தேன்.

 

யார் வேண்டுமானாலும் அரசியல்வாதி ஆகலாம்.  அரசியல்வாதிகள் மக்களை  இயக்கி கொண்டிருக்கிறார்கள். பா.ரஞ்சித் அரசியல்வாதி என்று கூறுவது அவருடைய சொந்த கருத்து என்னை பொறுத்தமட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல்வாதி ஆகலாம். நான் ஒரு அரசியல்வாதி என்ற முறையில் எல்லோரும் என் துறைக்கு வர ஆசைப்படுத்துவது எனக்கு மகிழ்ச்சிதான் எனக்கூறினார்.   

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

“விதிமுறைகள் மாறி விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tamilisai soundararajan says Rule is changed into a holiday for lok sabha election

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

தமிழகத்தில் நேற்று இறுதி நிலவரப்படி, 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த தேர்தலை விட 3 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக தென் சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “வெள்ளிக்கிழமையில் தேர்தல் நடத்துகிறார்கள். 3 நாள்கள் விடுமுறை வந்ததால் வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையே மாறி அது விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. 

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் தேர்தல் நாளை அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். ஏனென்றால், அன்று தேர்தல் நடத்தினால் அதை விடுமுறையாக எடுத்துக் கொண்டு போகிறார்கள். அதனால், வார நாட்களில் தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கிறேன். அதை பரிசீலித்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.