Skip to main content

''அவர்தான் எங்கள் கட்சியை தற்போது சுத்தம் செய்து வருகிறார்''- தேமுதிக விஜயபிரபாகரன் பேச்சு!

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

 '' Stalin is currently cleaning up our party '' - dmdk Vijayaprabhakaran speech

 

திருச்சி துறையூர் பாலக்கரையில் நகர, ஒன்றிய தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1000 பேருக்கு பொங்கல் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் செல்லதுரை வரவேற்றார்.

 

கொட்டும் மழையில் கூடியிருந்த மக்களிடையே, தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசுகையில், ”தேமுதிக மிகவும் கட்டுப்பாட்டுடன் உள்ள கட்சி. விஜயகாந்த் உடல்நிலை நன்கு தேறிவருகிறது என்றால் அதற்கு தொண்டர்களின் பிரார்த்தனை மட்டுமே காரணம். எந்த கட்சிக்கும் தேமுதிக சளைத்த கட்சியல்ல.

 

அதிமுக, திமுக என்ற இரு பெரும் கட்சிகள் இருந்தபோதே, தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்தது. தேமுதிகவிலிருந்து ஒரு சிலர் வெளியேறுவதால், குப்பைகள் அகற்றப்பட்டு கட்சி இப்போது சுத்தமாகி உள்ளது. ஸ்டாலின் சென்னையை சுத்தம் செய்தாரோ இல்லையோ, எங்கள் கட்சியை தற்போது சுத்தம் செய்து வருகிறார்.

 

பொங்கல் என்றாலே சூரிய பகவானை வழிபடுவதுதான் வழக்கம். தற்போது மழை பெய்வதால் சூரியனைப் பார்க்க முடியவில்லை. இதைப் பார்க்கும்போது 2021 தேர்தலில் சூரியனுக்கு வழியே விடாமல் செய்வதற்குதான் மழை பெய்து கொண்டிருக்கிறதோ எனத் தோன்றுகிறது.

 

தமிழ், தமிழ் என்று சொல்லி இந்திக்காரரான பிரசாந்த் கிஷோரை அரசியல் ஆலோசகராக வைத்துக் கொண்டு திமுக அரசியல் நடத்தி, தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்குகிறது. 2021-ல் தேமுதிக கூட்டணி வைத்தாலும், எந்த முடிவு எடுத்தாலும் அனைவரும் ஒன்றுபட்டு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" என்றார்.

 

பின்னர், பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு, நெய், முந்திரி, திராட்சை, முழு கரும்பு உள்ளடக்கிய சுமார் ரூ.500 மதிப்புள்ள பொங்கல் தொகுப்புப் பையை பொது மக்களுக்கு வழங்கினார். முன்னதாக விஜய பிரபாகரனுக்கு திருச்சி கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தேமுதிக கட்சி கொடியை விஜய பிரபாகரன் ஏற்றிவைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.