Skip to main content

ஸ்டாலின் பக்கம் தாவிய அழகிரி ஆதரவாளர்கள்!

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

 

தி.மு.க.விலிருந்து ஓரம் கட்டப்பட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் தேனி மாவட்டத்தில் ஓரளவுக்கு இருந்து வருகிறார்கள். இப்படி இருக்கக்கூடிய அழகிரி ஆதரவாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் அழகிரி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் அதோடு விளையாட்டுப் போட்டி வைத்தும், கேக் வெட்டியும் மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடி வருவது வழக்கம். அந்த அளவுக்கு அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலுமே கடந்த ஐந்த வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறார்கள். 

 

st

 

இந்த நிலையில் தான் கடந்த 27ம் தேதி தேனி பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனையும்,  பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டி போடும் திமுக வேட்பாளர்களான சரவணக்குமார், மகாராஜனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய தேனி வந்தார் ஸ்டாலின். இப்படி வந்த ஸ்டாலின் தேனியில் உள்ள பிரபல லாட்ஜில் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு எடுத்துக்கொண்டு கட்சிப் பொறுப்பாளர்களையும், கூட்டணி கட்சி பொறுப்பாளர்களையும் சந்தித்து தேர்தல் களம் குறித்து ஆய்வு செய்து வந்தார். 

 

அப்போது தேனி மாவட்டத்தில் உள்ள மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான தலைமை கழக முன்னாள் செயற்குழு உறுப்பினரும், பெரியகுளம் முன்னாள் நகர செயலாளருமான செல்லப்பாண்டியன், மாவட்ட முன்னாள் துணைச் செயலாளரான கம்பம் இளங்கோவன், நெசவாளர் அணியின் முன்னாள் செயலாளர் ஆண்டிப்பட்டி ஏ.கே.குமார், உத்தமபாளையம் முன்னாள் ஒன்றிய செயலாளர் முல்லை சேகர் உள்பட சில அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் தலைவர் ஸ்டாலினை சந்தித்து மாலை, சால்வை அணிவித்து கழகத்தில் ஐக்கியமாகிவிட்டனர். 

 

t

 

இதுபற்றி ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்த முன்னாள் பொறுப்பாளர்களிடம் கேட்டபோது... நாங்கள் அண்ணன் அழகிரி ஆதரவாளராக இருந்ததுனால எங்களிடம் இருந்த பொறுப்புகளையும் எடுத்துவிட்டு கட்சியில் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் எடுத்திருந்தனர். இதனால் எங்களால் கழக பணியாற்றாமல் இருக்க முடியவில்லை. அதோடு தலைவராக தளபதி வந்ததிலிருந்தே அனைத்து பகுதிகளிலும் கட்சி வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டு எதிர்க்கட்சிகளுக்கும் சரியான பதில் அடி கொடுத்து கழகத்தை வழிநடத்தி வருவதைக் கண்டு நாங்களே பூரித்துப் போய் விட்டனர்.  

 

அதனால் தான் இனிமேல் எதற்கு பெயர் சொல்லும் அளவில் மட்டும் இருப்பவர்களுடன் இருந்தால் எங்களுக்கும், இனி மரியாதை இருக்காது என்று நினைத்துதான் தளபதி முன்னால் திமுகவில் சேர்ந்து விட்டோம். எங்களுடன் ஒவ்வொரு பகுதியிலும் இருந்த கிளை பொறுப்பாளர்கள் கட்சித் தொண்டர்களும் மீண்டும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதன்மூலம் மாவட்டத்தில் பெரும்பான்மையான அழகிரி ஆதரவாளர்கள் தளபதி பக்கம் வந்துவிட்டோம். இன்னும் ஒரு சில முன்னாள் பொறுப்பாளர்கள் மட்டுமே அழகிரி பக்கம் இருக்கிறார்கள். அவர்களும் கூடிய விரைவில் தலைவர் பக்கம் வருவார்கள் என்று கூறினார்கள். ஆக தேனி மாவட்டத்தில் உள்ள அழகிரியின் கூடாரமும் காலியாகிவிட்டது!

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.