Skip to main content

“போக்ஸோ சட்டத்தில் தப்பிவிடும் குற்றவாளிகள்!” -வன்புணர்ச்சி இல்லாத இந்தியா அமைப்பு வேதனை!

Published on 01/07/2019 | Edited on 01/07/2019

 

இந்தியாவில் சிறுவர் உரிமைகளுக்காகவும்,  குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு முறையை நடை முறைப்படுத்துவதற்காகவும் தொடர்ந்து போராடிவரும் கைலாஷ் சத்தியர்த்தி,  அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராவார். இவரது அமைப்பு, நாடு முழுவதும், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பிற தன்னார்வ அமைப்புக்களுடன் சேர்ந்து, பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறது.  

 

r

 

தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீட்ஸ் நிறுவனமானது, மாநில செயலகமாக இருந்து, தமிழகத்தில் ‘வன்புணர்ச்சி இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என்கிற நாடு தழுவிய இயக்கத்தினை செயல்படுத்தி வருகிறது.  கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அமைப்போடு இணைந்து,  வன்புணர்ச்சியைத் தடுக்கவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

 

அதன் ஒருபகுதியாக, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே ‘வன்புணர்ச்சி இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என்கிற உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 69 வேட்பாளர்கள் இந்த உறுதிமொழிப்பத்திரத்தில் கையெழுத்திட்டனர். அவர்களில் 5 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த 28-ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில், மக்களின் உறுதியேற்பு நிகழ்வு நடந்திருக்கிறது. 500 கிராம சபைகளில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

r

 

ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி மற்றும் திருவண்ணாமலையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், ‘வன்புணர்ச்சி இல்லாத இந்தியா’ அமைப்பின் தமிழக அமைப்பாளர் ராஜகோபால் “தமிழகத்தில் நமது பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பாலியல் ரீதியான வன்முறை நடைபெறாமல் தடுக்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். வன்புணர்ச்சி இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.” என்று கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தங்கள் கைகளை உயர்த்தி மக்கள் அதனைத் தீர்மானமாக நிறைவேற்றினார்கள். 

 

குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சாரம் (தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி) மாநில அமைப்பாளரும், வன்புணர்ச்சி இல்லாத இந்தியா அமைப்பின் தமிழக அமைப்பாளருமான பா.ராஜகோபால் “பெண்களையும் குழந்தைகளையும் இரு கண்களாகப் பேற்றும் நம் தேசத்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் வளரியம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் அதிகரித்திருக்கிறது. தற்போது, கூட்டு பாலியல் வன்முறைகள், அதை வைத்து மிரட்டிப் பணம் பறிக்கும் நிகழ்வுகளும் நடந்த வண்ணம் உள்ளன.

 

r

 

 இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்கு தமிழக அரசு போக்ஸோ சட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தின்படி முன்பு மிகக்குறைவான அளவிலேயே வழக்குகள் பதிவானது. இப்போது, போக்ஸோ சட்டத்தில் மிக அதிக அளவில் வழ்க்குகள் பதிவாகி வருகின்றன. ஆனாலும், குற்றவாளிகள் மீதான குற்றம் உறுதிசெய்யப்படாத நிலையில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பதில்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது.” என்றார் வேதனையுடன். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

‘பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கு நிலத்தை விற்கமாட்டோம்!’  - தம்பதியர் மீது வழக்கு 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
 case was filed against a couple who sold land due to caste differences

அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் தமிழ்ச்செல்வன். ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்துவரும் இவர், நில புரோக்கர்கள்  மூலம், அதே ஊரைச் சேர்ந்த வீரமணி மற்றும் அவருடைய மனைவி சொர்ணலதா ஆகியோருக்குச் சொந்தமான 5 சென்ட் நிலத்தை ரூ.44 லட்சத்துக்கு கிரயம் பேசி முடிப்பதற்காக, ரூ.21000 முன்பணம் கொடுத்துள்ளார்.

அதன்பிறகு, கிரயப்பத்திரம் உள்ளிட்ட அனைத்துப் புதிய ஆவணங்களையும் தயார் செய்து, நில புரோக்கர்களுடன் வீரமணி தம்பதியர்  வீட்டுக்குச் சென்று, பத்திரப் பதிவு செய்துகொள்கிறோம் என்று கூறியபோது, “நீங்க என்ன ஜாதி?” என்று தமிழ்ச்செல்வனைப் பார்த்துக் கேட்டுள்ளனர். தான் இந்து பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று தமிழ்ச்செல்வன் சொன்னதும் “நாங்க உயர்ந்த ஜாதி. தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த உங்களுக்கு இடத்தை விற்கமாட்டோம். வெளியே போ.” என்று வீரமணி தம்பதியர் விரட்டியிருக்கின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்நிலையம் சென்ற தமிழ்ச்செல்வன், தன்னை ஜாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதாக புகாரளிக்க, வீரமணி மற்றும் சொர்ணலதா மீது  வழக்கு பதிவாகியுள்ளது.