Skip to main content

வாகன ஓட்டிகளிடம் மிரட்டி வசூல் வேட்டை; சிறப்பு எஸ்.ஐ. அதிரடி இடமாற்றம்!

Published on 13/03/2022 | Edited on 13/03/2022

 

Intimidation collection hunt for motorists; Special SI. Action Swap!

 

நாமக்கல்லில், வாகன ஓட்டிகளிடம் கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் வசூல் வேட்டை நடத்திய சிறப்பு எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உள்கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு காவல்நிலையங்களில் சிறப்பு எஸ்.ஐ. ஆக பணியாற்றியவர் பழனிசாமி. இவர், வாகனத் தணிக்கையின்போது கட்டாய வசூலில் ஈடுபட்டதாக புகார்கள் கிளம்பின. அதன்பேரில் அவரை, கொல்லிமலையில் உள்ள வாழவந்திநாடு காவல்நிலையத்திற்கு இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டர். 

 

இந்த நிலையில், மார்ச் 10- ஆம் தேதி சேந்தமங்கலம் காவல்நிலையத்திற்கு எஸ்.ஐ. பழனிசாமி இடமாறுதலில் வந்துள்ளார். அப்போது அவர் கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி மாலைப்பாதை நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டு, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ஓட்டிகளிடம் வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க 100 ரூபாய் வீதம் கட்டாயப்படுத்தி வசூலித்துள்ளார். 

 

பணம் கொடுக்காத வாகன ஓட்டிகளை அங்கிருந்து செல்ல விடாமல் வாகனத்தின் சாவியைப் பிடுங்கி வைத்துக்கொண்டு தகராறு செய்துள்ளார். பலரை கண்ணியக் குறைவாகவும் திட்டியுள்ளார். இதை வாகன ஓட்டிகள் செல்போன் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ பதிவுகள், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. 

 

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர், பழனிசாமியை மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். வசூல் வேட்டை புகாரின்பேரில் ஒரே எஸ்.ஐ. குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாக இடமாறுதலுக்கு உள்ளான சம்பவம் நாமக்கல் மாவட்ட காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.