Skip to main content

கமிஷன், கட்டிங், கரப்ஷன்.. கோட்டையை கலக்கும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்..! 

Published on 01/06/2021 | Edited on 01/06/2021

 

Special Assistant Police Inspector in a patrol vehicle ..!

 

திருச்சி கோட்டை  சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் காவல் நிலையத்தில் இருந்து பணியாற்றுவதைவிட அதிக அளவில் ரோந்து பணியில் ஆர்வம் காட்டுவதோடு அதிகாரிகளிடம் விரும்பி கேட்டு ரோந்து பணியை மட்டுமே வாங்கிக்கொள்ளுவதாகக் கூறப்படுகிறது.

 

இதன் பின்புலம் குறித்து நாம் விசாரித்ததில், கோட்டை சரகத்திற்கு உட்பட்ட ஓயாமாரி இடுகாட்டுக்கு அருகே காவிரி கரையோரம் சாக்கு மூட்டைகளில் மணல் அள்ளி விற்பனை செய்யும் கும்பலிடமிருந்து கமிஷன் பெறுவதும், நூற்றுக்கும் மேற்பட்ட தள்ளுவண்டி வியாபாரிகளிடம் தினந்தோறும் ஒரு வண்டிக்கு காலை 30 ரூபாய் மாலை 30 ரூபாய் என கமிஷன் பெறுவதும் அவரது வாடிக்கையாம். அதுமட்டுமல்லாமல், தினமும் '1848' என்ற மதுபான ரகமும் சிறப்பு உதவி ஆய்வாளருக்குக் கையூட்டாகக் கொடுப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

 

மேலும், கோட்டை சரகத்திற்கு உட்பட்ட டீக் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை வஸ்துக்கள் உள்ளிட்டவற்றைப் பல மடங்கு அதிகமாக விற்பனை செய்வதில் கமிஷன் பெறுவதாகவும் கூறப்படுகிறது. அதிலும் ஒவ்வொரு வியாபாரியும் ஒவ்வொரு நாள் முறை வைத்து மதுவும் அன்றைய நாளுக்கான கமிஷனும் கொடுத்து இந்த சிறப்பு உதவி ஆய்வாளரைச் சிறப்பாகக் கவனிப்பதால், பல வியாபாரிகள் அவருக்குப் புனைப் பெயர் ஒன்றையும் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இவர் தினந்தோறும் வியாபாரிகளிடம் இருந்து 1848 ரக மது பாட்டிலும் கமிஷனும் பெறுவது மட்டுமல்லாமல், மாத கமிஷனும் வியாபாரிகளிடமிருந்து தவணை தவறாமல் பெறுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அவசர உதவிக்கும் அவசர தேவைக்கும் பயன்படுத்தப்பட வேண்டிய ரோந்து வாகனத்தை தற்போது வியாபாரிகளிடமிருந்து கமிஷன் வாங்கவும், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பவர்களிடமும், கஞ்சா விற்பவர்களிடமும்,  பான்மசாலா குட்கா கும்பலிடமும் கமிஷன் வாங்குவதற்காக மட்டுமே சிறப்பு உதவி ஆய்வாளர் பயன்படுத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, காவல்துறை ஆணையர் இவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பாரா என்று கேள்வி பொது மக்களிடமும், வியாபாரிகளிடமும் தற்போது எழுந்துள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.