Skip to main content

குன்னூர் பேருந்து விபத்திற்கான காரணம் குறித்து எஸ்.பி. விளக்கம்

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

Sp about the cause of the Coonoor bus incident 

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பர்லியாறு என்ற இடத்திற்கு அருகே சுற்றுலா பேருந்து ஒன்று நேற்று முன்தினம் (30-9-2023) மாலை 6 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. கடந்த 28 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திலிருந்து புறப்பட்டு உதகமண்டலத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று தென்காசிக்குத் திரும்பிச் செல்வதற்காகப் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த விபத்து சம்பவத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். தமிழக அரசு சார்பில் நிவாரணமும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் இந்த விபத்தில் சிக்கிய பேருந்தை சுமார் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு 3 ராட்சத கிரேன் உதவியுடன் நேற்று மாலை மீட்கப்பட்டது. இதனையடுத்து இந்த விபத்து தொடர்பாக 4 பேர் மீது 3 பிரிவின் கீழ் குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதன்படி பேருந்து உரிமையாளர் சுப்பிரமணி (வயது 65), ஓட்டுநர்கள் முத்துக்குட்டி (வயது 65), கோபால் (வயது 32) மற்றும் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் (வயது 64) ஆகியோர் மீது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட சட்டப்பிரிவு 279, 337, 304 (A) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

இந்நிலையில் இந்த விபத்து குறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘குன்னூர் அருகே பேருந்து கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்ததற்கு பேருந்து ஒட்டுநரின் கவனக்குறைவே காரணம்’ என தெரிவித்துள்ளார். மேலும் இது போன்று விபத்து நடக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், ஆலோசனையையும் காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், ‘மலைக்கு சுற்றுலா வரும் வெளியூர் வாகன ஓட்டிகள் மிகவும் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

 

Sp about the cause of the Coonoor bus incident 

 

அதிலும் குறிப்பாக மலை பிரதேசங்களில் வாகனம் இயக்கும் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். சுற்றுலா வரும் வாகனங்களை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். மலைப்பிரதேச சாலைகளில் வாகனத்தை இயக்குவதற்கு முன்பு வாகனத்தின் தன்மையை கண்டிப்பாக சோதனை செய்ய வேண்டும். நீலகிரி போன்ற மலைப் பிரதேசங்களில் கண்டிப்பாக 35 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தலைக்குப்புற கவிழ்ந்த மினி பேருந்து; ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

A mini bus carrying Ayyappa devotees met with an accident

 

தென்காசியில் ஐயப்ப பக்தர்கள் பயணித்த மினி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மினி பேருந்து தலைகுப்புற விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாமக்கல்லை சேர்ந்த பக்தர்கள் சிலர் சபரிமலைக்கு மாலை அணிந்து மினி பேருந்து மூலமாக சபரிமலை கோவிலுக்கு சென்று வந்தனர். சுவாமி தரிசனம் முடித்துக் கொண்டு வரும் வழியில் குற்றாலத்திற்கு சென்று குளித்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது சிங்கிலிபட்டி பகுதியை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த காரின் மீது ஐயப்ப பக்தர்கள் வந்த மினி பேருந்து மோதியது. இதில் பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் ஐந்து பேர் காயமடைந்தனர். காயத்துடன் மீட்கப்பட்ட பக்தர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஜேசிபி வாகனம் கொண்டுவரப்பட்டு பேருந்து நிறுத்தப்பட்டது. இந்த விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“இன்று துவக்கி வைத்த பயணத்தில்தான் எத்தனை புன்னகைகள்” - முதல்வர் நெகிழ்ச்சி

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

"So many smiles on the journey that was inaugurated today" - Chief Minister Leschi

 

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 2.92 கோடி ரூபாய் மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.11.2023) தனது முகாம் அலுவலகத்திலிருந்து தொடங்கி வைத்தார். அதன் அடையாளமாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள அச்சுற்றுலா பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளை வழியனுப்பி வைத்தார்.

 

இந்த மாணவர்கள் குழுவில் பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறைவுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் சானிடோரியம் - செவித்திறன் குறைவுடையோருக்கான நடுநிலைப்பள்ளி மற்றும் தாம்பரம் சானிடோரியம் அரசு அறிவுசார் குறையுடையோருக்கான அரசு நிறுவனம் ஆகிய மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவ, மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் தலைசிறந்த சுற்றுலா தலங்களுள் ஒன்றான மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர்.

 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், கா. ராமச்சந்திரன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் கமல் கிஷோர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

"So many smiles on the journey that was inaugurated today" - Chief Minister Leschi

 

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன. மாற்றுத் திறனாளி மாணவர்களைத் திரையரங்கம் - மெட்ரோ இரயில் பயணம் - விமானப் பயணம் அழைத்துச் சென்றோம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் வாங்கப்பட்ட புதிய வால்வோ பேருந்துகளில் முதல் பயணம் அவர்களுக்கான மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றேன். இன்று துவக்கி வைத்த இந்தப் பயணத்தில்தான் எத்தனை புன்னகைகள்” என்று குறிப்பிட்டு அதற்கான காணொளி ஒன்றையும் இணைத்துள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்