Skip to main content

பா.ஜ.க.வினரின் நூதன மோசடி....! - ஆதாரம் வெளியிட்ட கரூர் எம்.பி.ஜோதிமணி!

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

Source published by Karur MP Jyotimani

 

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, 5-ஆம் தேதி கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பா.ஜ.க.வினர் 'ஹெல்த் இன்சூரன்ஸ் கார்டு' என்று சொல்லி, ஒரு அட்டையைப் பொதுமக்களிடம் கொடுத்து, நூறு, இருநூறு, முன்னூறு ரூபாய் எனப் பணவசூல் செய்கிறார்கள். இந்த அட்டை செல்லாதது. ஏற்கனவே, தி.மு.க ஆட்சிக் காலத்தில் மறைந்த முதல்வர் கலைஞரால், 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' தொடங்கப்பட்டது. பிறகு, ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, அது 'அம்மா காப்பீட்டுத் திட்டம்' என மாற்றி, செயல்பாட்டில் இருந்துவருகிறது. இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் பா.ஜ.க தலைவர்களின் படங்களைப் போட்டு, பொதுமக்களை ஏமாற்றி அட்டைகளை வழங்குகிறார்கள். 

 

பா.ஜ.க.வினர் திட்டமிட்டே மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபடுகிறார்கள். ஏற்கனவே, தமிழகத்தின் நலனுக்கு எதிராக இருக்கும் மத்திய பா.ஜ.க அரசு, தமிழர்களை எல்லா நிலைகளிலும் ஏமாற்றலாம் என மோசடி செய்கிறார்கள். அவர்கள் வழங்குகின்ற இது போன்ற ஏமாற்று அட்டைகளைப் பெறுவதற்கு பணம் கேட்டால், யாரும் கொடுக்க வேண்டாம். மத்திய அரசு எந்தத் திட்டத்தையும் நேரடியாக ஒரு மாநிலத்தில் செய்ய முடியாது. அந்தந்த மாநில அரசுகளுடன் சேர்ந்துதான் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இந்த 'மோசடி அட்டை'  தொடர்பாக பா.ஜ.கவினர் யார் வந்தாலும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். 

 

இதுபோன்ற போலி அட்டைகளை கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பொதுமக்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வழங்குகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது. அந்த அட்டையை வைத்து, எந்த மருத்துவமனையிலும் இலவசமாக, மருத்துவம் பார்க்க முடியாது. பா.ஜ.க செய்யும் நூதனக் கொள்ளையில் இதுவும் ஒன்று.

 

Source published by Karur MP Jyotimani

 

சென்ற அக்டோபர் 15-ஆம் தேதி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மொஞ்சனூர் ஊராட்சியில் உள்ள தொட்டம்பட்டி என்ற ஊரில், இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின், போலி அட்டையை பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவரான அண்ணாமலை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார். இந்திய காவல்துறையில் பணிபுரிந்த, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான, படித்த அண்ணாமலையே, இப்படி ஒரு மோசடியான திட்டத்தை, அரசியலுக்காகச் செய்வது, பொதுமக்களை நம்பவைத்து ஏமாற்றும் துரோகச் செயலாகும்" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

கைவிரித்த பா.ஜ.க.! எதிர்த்து களம் இறங்கும் வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
BJP leader is contesting against Radhika in Virudhunagar

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமான ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை எல்லாம் முடிந்து கட்சியின் தலைவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

இந்த தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகிய பாஜக, தன்னுடைய தலைமையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், தமாக, அமமுக, பாமக, சமத்துவ மக்கள் கட்சி,  புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளது.

BJP leader is contesting against Radhika in Virudhunagar

காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக கூறிய சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மருத்துவர் வேதா என்பவர் விருதுநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ம.வீரப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் வேதா. இவர் மதுரை மேற்கு மாவட்ட விவசாயி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், பாஜக தலைமை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடிகர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவை விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இதனால் விரக்தியடைந்த பாஜகவைச் சேர்ந்த டாக்டர் வேதா  சுயேட்சையாக தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார்.