Skip to main content

இறந்துபோன தந்தையை வீட்டுக்குள் புதைத்த மகன்...

Published on 01/09/2020 | Edited on 01/09/2020

 

The son who buried his dead father in the house

 

 

பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ளது களாம்பட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி வயது 65. இவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்து போயிருந்தார். இவரது உடலை அவரது வீட்டுக்கு அருகிலேயே அவரது மகன் பாலசுப்பிரமணியன் புதைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

 

இதைறிந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து யாருக்கும் தெரியாமல் பாலசுப்பிரமணியன் தனது தந்தையின் உடலை வீட்டுக்குள்ளேயே இரவோடு இரவாக புதைத்துள்ளார். ஊருக்கு மத்தியில் உள்ள அவரது வீட்டுக்குள் இறந்து போன அவரது தந்தையின் உடலை புதைத்தது கண்டு கோபமுற்ற ஊர் மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர். வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் களரம்பட்டி மங்கூன் அம்மாபாளையம் ஆகிய கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் பேசியதால் ஆத்திரம்; சிறுமியை ஆற்றில் தூக்கி வீசிய தந்தை

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
Father throws girl into river Yamuna after talking to boyfriend

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ரா மாவட்டம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி ஒருவர். இவர் தனது ஆண் நண்பருடன் பேசியிருக்கிறார். இது சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவர அவரது தந்தை சிறுமியைத் திட்டியுள்ளார். அத்துடன் உடனடியாக சிறுமிக்குத் திருமணம் செய்து வைக்கவும் திட்டமிட்டுள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ள சிறுமிக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லாததால் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை சிறுமியைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். 

இந்த நிலையில், சம்பவத்தன்று தந்தை சிறுமியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். சிறுமியின் தந்தை தனது நண்பர் ஒருவரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில், குருகிராம் செல்லும் வழியில் யமுனை ஆற்றின் மிதவை பாலத்தில் மூவரும் வந்துகொண்டிருந்த போது, தந்தை சிறுமியின் கழுத்தைத் துணியால் நெரித்துள்ளார். பின்பு அவரும் அவரது நண்பரும் சேர்ந்து சிறுமியை ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர். ஆற்றில் அடித்துக்கொண்டு போன சிறுமியின் கதறல் கேட்டு ஆற்றுப்படுகையில் உள்ள மக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியின் புகாரின் பேரில் சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பர் இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குழந்தைகள் நல அதிகாரிகளிடம் சிறுமி தனக்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறியுள்ளார். பின்னர், சிறுமி பாதுகாப்பாகக் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Next Story

நாசரின் தந்தை காலமானார்

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

 

actor naasar father passed away

 

தமிழ் சினிமாவில் எல்லா கதாபாத்திரத்திற்கும் ஏற்றார்போல தன் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துபவர்களில் முக்கியமானவர் நாசர். இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 38 ஆண்டுகள் திரைத்துறையில் பயணித்து வரும் நாசர் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். 

 

இந்த நிலையில், நடிகர் சங்கத் தலைவர் நாசரின் தந்தை மாபுப் பாஷா இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 95. செங்கல்பட்டு தட்டான்மலை தெருவில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவால் மாபுப் பாஷா மறைந்துள்ளார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில்  ஆழ்த்தியுள்ளது. திரையுலகினர் உள்ளிட்ட பலரும் நாசருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.