Skip to main content

மீன் வியாபாரத்திற்குச் சொகுசு கார்; பெற்றோருக்கு மகன் கொடுத்த அன்புப் பரிசு

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

 son bought a luxury car for his parents to sell fish

 

இராமநாதபுரம் மாவட்டம் அச்சந்தன்வயல் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவானந்தம் - காளியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு சுரேஷ் கண்ணன் என்ற மகனும், 2 மகளும் உள்ளனர். காளியம்மாள் - சிவானந்தம் தம்பதியினர் கண்மாய்களில் குத்தகைக்கு மீன்பிடித்து நகரில் இருக்கும் கடைகளுக்கும் பொதுமக்களுக்கும் விற்கும் தொழில் செய்து வருகின்றனர். வறுமையான நிலையிலும் சிவானந்தம் தம்பதியினர் தங்களது பிள்ளைகளைப் படிக்க வைத்துள்ளனர். 

 

இந்த நிலையில் சிவானந்தத்தின் மகன் சுரேஷ் கண்ணன் மெரைன் இன்ஜினியரிங் படித்து முடித்து, வளைகுடா நாட்டைச் சேர்ந்த கப்பல் நிறுவனத்தில் மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வருகிறார். தான் வேலைக்குச் சேர்ந்த கையோடு அம்மா - அப்பாவிற்குச் சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்துள்ளார். தங்கைகளுக்குத் திருமணமும் செய்து வைத்துள்ளார். 

 

இந்த நிலையில் சுரேஷ் கண்ணன் தனது பெற்றோர்களை, நீங்கள் வேலைக்குச் சென்றது போதும் வீட்டில் ஓய்வெடுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் உழைத்து வாழ வேண்டும் என்று விரும்பிய சிவானந்தம் மற்றும் காளியம்மாள் தம்பதியினர், வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து தங்களது பெற்றோர் கஷ்டப்படக்கூடாது என்று நினைத்த சுரேஷ் கண்ணன், அவர்கள் மீன் பிடித்து நகரில் விற்க ஏதுவாக ரூ.25 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிக் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிவானந்தம், கண்மாய்களில் மீன் பிடித்து காரில் வைத்து நகரில் இருக்கும் கடைகளில் விற்பனை செய்து வருகிறார். பெற்றோரின் கஷ்டத்தைப் போக்க சொகுசு காரை வாங்கிக் கொடுத்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள சுரேஷ் கண்ணன் செயல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.