Skip to main content

‘பாலிஷ் போடணுமா பாலிஷ்...’ - இளம்பெண்ணிடம் நகையை பறித்த மர்ம நபர்கள்

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

some person stole jewelry from a young woman in Cuddalore

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி அமுதமொழி. கணவர் ராமகிருஷ்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வருவதன் காரணமாக, அருகிலுள்ள தி.ஏந்தல் கிராமத்திலுள்ள தனது தாய் வீட்டில் அமுதமொழி வசித்து வருகின்றார்.

 

நேற்று மதியம் சுமார் மூன்று மணி அளவில் பித்தளை பாத்திரங்களுக்கு பாலிஷ் போடுவதாகக் கூறி இரண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஏந்தல் கிராமத்தைச் சுற்றி வந்துள்ளனர் அப்போது, வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த அமுதமொழியிடம் பேச்சு கொடுத்த அவர்கள், அங்கிருந்த பித்தளை பாத்திரத்திற்கு பாலிஷ் போட்டு அதை பளிச்சென ஆக்கி அவரை நம்ப வைத்துள்ளனர்.

 

இதேபோல் தங்க நகைக்கும் பாலிஷ் போட்டால் புதிய நகை போல் இருக்கும் என நம்ப வைத்து அமுதமொழி அணிந்திருந்த நகைக்கு பாலிஷ் போட்டுத் தருவதாகக் கூறியுள்ளனர். அவரும் தன் கழுத்தில் அணிந்திருந்த எட்டு சவரன் தாலி செயினை கழட்டி அவர்களிடம் கொடுத்து பாலிஷ் போடுமாறு கூறியுள்ளார். இதையடுத்து, தங்க நகை எடை அதிகம் உள்ளதால் வெந்நீரில் பாலிஷ் போட்டால்தான் பளிச்சென இருக்கும் என்று கூறியுள்ளனர். அதன்படி வெந்நீர் கொண்டு வருவதற்காக அமுதமொழி வீட்டுக்குள்ளே சென்றுள்ளார். வெந்நீருடன் அவர் வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் தங்கச்சங்கிலியுடன் மாயமாகி இருந்தனர்.

 

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் உடனே கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்து விவரத்தைக் கூறியுள்ளார். அப்பகுதி மக்கள் மர்ம நபர்களைத் தேடி அலைந்தும் அவர்கள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அமுதமொழி ராமநத்தம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அதே பகுதியில் வேறொரு வீட்டில் நகை பாலிஷ் போடுவதாகக் கூறி பேச்சு கொடுக்கும்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு மர்ம நபர்களைப் பிடிப்பதற்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.