Skip to main content

மாற்றுத்திறனாளியின் வயிற்றுக்குள் குளிர்பான பாட்டில்; மருத்துவர்கள் அதிர்ச்சி

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

A soft drink bottle inside a disabled person's stomach The doctors were shocked

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயது வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடுமையான வயிற்றுவலி என்று புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனைகள் செய்து வயிற்றை எக்ஸ்ரே, ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். வயிற்றுக்குள் மலக்குடலில் குளிர்பான கண்ணாடி பாட்டில் இருந்தது தான் அதிர்ச்சிக்குக் காரணம். எக்ஸ்ரே ரிப்போர்ட்டுடன் மருத்துவர்கள் குழு இந்த பாட்டிலை எவ்வாறு அகற்றுவது என்று அவசர அவசரமாக ஆலோசனை செய்து உடனே அறுவை சிகிச்சை செய்தனர்.

 

அப்போது மாற்றுத்திறனாளி இளைஞரின் மலக்குடலில் 21 செ.மீ உயரம், 10 செ.மீ வட்டம் கொண்ட பச்சைக் கலர் குளிர்பான பாட்டில் இருந்ததால் மலக்குடல் பகுதி கிழிந்து சேதமடைந்திருந்தது. பாட்டிலை அகற்றியதுடன் கிழிந்த மலக்குடலுக்கு மாற்றாகச் செயற்கையாக மலக்குடல் பகுதி பொருத்தி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். அதனைத் தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி இளைஞர் வயிற்றில் இருந்த கண்ணாடி குளிர்பான பாட்டிலை அகற்றி மாற்று உறுப்பு பொருத்திய அரசு மருத்துவக் குழுவினரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

சுமார் 21 செ.மீ உயரம் உள்ள குளிர்பான பாட்டில் எப்படி மாற்றுத்திறனாளி வயிற்றுக்குள் போனது என்ற கேள்விக்கு, மாற்றுத்திறனாளி இளைஞரை யாரோ கட்டாயப்படுத்தி அவரது மலவாய் வழியாக இந்த பாட்டிலை உள்ளே அழுத்தி இருக்க வேண்டும். வாய் வழியாக இவ்வளவு உயரமான வட்டமான பாட்டில் உள்ளே போக வாய்ப்பில்லை. உயரம் மற்றும் வட்டம் அதிகமாக இருந்ததால் தான் மலக்குடல் கிழிந்து சேதமடைந்துள்ளது. தற்போது தீவிர சிகிச்சையில் இருப்பதாலும் வாய் பேச முடியாததாலும் அவர் இது பற்றி ஏதும் சொல்ல முடியாமல் உள்ளார். அவரது உறவினர்களுக்கும் இது குறித்து எதுவும் தெரியவில்லை. அவராக அந்த அளவு பாட்டிலை உள்ளே அனுப்புவது கடினம். யாரோ இந்த கொடூரமான செயலைச் செய்துள்ளனர் என்கின்றனர். இதுபோன்ற கொடூரச் செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது புகார் கொடுக்க வேண்டும் என்று காத்திருக்காமல் போலீசார் உடனே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டு வேலைக்குச் சென்ற போது பாலியல் தொல்லை; மதபோதகர் அடித்துக் கொலை

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
misbehaviour while working at home; The priest was lost his lives

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி என்கிற டேனியல் (62). இவர் புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். மேலும், இவர் மண்டையூர், மாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் மாலை நேரத்தில் சென்று கிறிஸ்துவ பாடல்களை பாடி மத போதனையில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்று (07-12-23) காலை 6 மணியளவில் டேனியல் வீட்டின் வாசலில் ஒரு பெண் அழுதபடி அமர்ந்திருந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண், மதபோதகர் டேனியலை தான் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் மண்டையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், கொலை செய்யப்பட்டு கிடந்த டேனியலின் உடலை கைப்பற்றி அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், டேனியலுக்கும் அந்த பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது, டேனியல் தான் தனியாக இருப்பதாகவும், தனக்கு சமையல் மற்றும் வீட்டு வேலை செய்வதற்கு ஆள் தேவை என்றும் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த அந்த பெண், டேனியல் வீட்டிற்கு சென்று தங்கி அங்கு வேலை பார்த்து வந்துள்ளார்.

இதற்கிடையே, டேனியல் அந்த பெண்ணுக்கு தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே போல், நேற்று முன் தினம் (06-12-23) இரவும் டேனியல், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், டேனியல் மீது வெறுப்பு ஏற்பட்டு அவரை அந்த பெண் கீழே தள்ளியதில் மயக்கம் அடைந்துள்ளார். அப்போது அவரது வீட்டில் மோட்டார் சைக்கிளில் இருந்து கழற்றி வைக்கப்பட்ட பகுதியால் முகம் மற்றும் தலையில் அடித்ததில் டேனியல் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இறந்து கிடந்த டேனியல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்து கீரனூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். 

Next Story

21 தமிழக மீனவர்கள் கைது; தொடரும் அட்டூழியம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

21 Tamil Nadu fishermen arrested; Continued atrocities

 

மிக்ஜாம் புயல் காரணமாக பல நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில், நேற்று கடலுக்கு சென்ற மீனவர்கள் 21 பேர் இன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த மாதம் 27 ஆம் தேதியிலிருந்து புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்தனர். புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து, நேற்று மீன் பிடிக்கச் சென்றனர்.

 

நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை மன்னார் - கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 17 பேரைக் கைது செய்திருந்தனர். இந்நிலையில் இன்று தற்போது ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த மொத்தம் 21 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்த 21 மீனவர்களில் 13 பேர் புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள், 8 பேர் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும் யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.