Skip to main content

தங்க சண்முக சுந்தரம் ரவுடிப் பட்டியலில் இருந்து விடுவிப்பு; விவசாய சங்கங்கள் வரவேற்பு

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

social activist thanga shanmugasundaram name released from wanted list

 

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சை மனிதன் என அழைக்கப்படும் தங்க சண்முக சுந்தரம். பொது நலன், இயற்கை நலன், மக்கள் நலன் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டங்களை வித்தியாசமான போராட்டங்களை நடத்தி வந்தவர். அரியலூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தில் வெள்ள நீர் பாதிப்பால் நெற்பயிர்கள் மூழ்கியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைந்து நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது இவர் மீது வழக்கு தொடரப்பட்டு ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் விசாரணை கைதியாக  அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

 

இயற்கை வளங்களை காக்க வேண்டும்; நீர்த்தேக்கங்களும் அணைக்கட்டுகளையும் கட்டிடவும் ஏரி குளங்களை தூர்வாரிடக் கோரியும் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், தமிழக முதல்வர் உட்பட பலருக்கும் மனு செய்வது; சாயம் சார்ந்த பிரச்சனைகளுக்காகவும் போராடுவதோடு இயற்கை வளம் இயற்கை உணவு ஆகியவற்றை பாதுகாக்கவும் குரல் கொடுத்து வந்தவர். இப்படி  தனது அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தவர் மீது தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரியலூர் மாவட்ட காவல்துறை இவரை மக்கள் நல போராட்டங்களில் பங்கு கொண்டு செயல்படுவதை தடுக்கும் பொருட்டும் மிரட்டும் நோக்கத்தோடும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பை குறைப்பதற்காகவும் இவரை ரவுடிப் பட்டியலில் சேர்த்து வைத்திருந்தனர்.

 

அண்மையில் மாவட்டக் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ், திருமானூர் காவல்துறையினர் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதில் தங்க சண்முக சுந்தரம் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை மட்டுமே நடத்தி வருகிறார் என்றும் எந்த ஒரு குற்ற நடவடிக்கைகளிலோ சமூக விரோதச் செயல்களிலோ ஈடுபடவில்லை என்றும் ஆராய்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் மாவட்டக் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் உத்தரவின் பேரில் ரவுடி பட்டியலில் இருந்து தங்க சண்முக சுந்தரத்தை நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

மேலும் இது குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில், "அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவராக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கொள்கை வழியில் பயணிப்பவர் பச்சை மனிதன் என்று அழைக்கப்படும் தங்க சண்முக சுந்தரம். இயற்கை விவசாயம் சிறுதானியங்களை விரிவுபடுத்த குரல் கொடுப்பவர் ஏரி குளங்களை தூர்வாரிட வேண்டும் என்றும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தி விவசாயம் செழிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து அனுமதி வாங்கி காவிரி பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க காரணமாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டவர். தொடர் கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தியவர். இவரை ரவுடிப் பட்டியலில் சேர்த்தது தவறு எனக் கருதியும் இதுநாள் வரை எந்த ஒரு குற்றச் சம்பவத்திலும் ஈடுபடவில்லை என்றும் ஆராய்ந்து அரியலூர் மாவட்டக் காவல்துறை அவரது பெயரை நீக்கியது வரவேற்கத்தக்கது" என்கிறார்கள் விவசாய சங்க பிரதிநிதிகள்.

 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயற்குழு நிர்வாகி வேலுமணி மற்றும் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் அரியலூர் மாவட்ட நிர்வாகி டி.பழூர் பாண்டியன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, இந்திய விவசாய சங்க நிர்வாகி வாரணவாசி இராஜேந்திரன், தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகி அறுசீர் தங்கராசு, நம்மாழ்வார் வாழ்வாதாரப் பாதுகாப்பு இயக்க நிறுவனர் பா.பாரதிதாசன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கூட்டமைப்பின் அரியலூர் சங்கர், தமிழ்க்களம் இளவரசன் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.