Skip to main content

அரசு பேருந்தின் பின்பக்க கம்பியை பிடித்துக்கொண்டு ஸ்கேட்டிங் பயணம்... வைரலாகும் வெளிநாட்டவர்

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

 Skating ride holding the back rail of a government bus... a viral foreigner

 


கோவையில் அரசு பேருந்தின் பின்பக்கத்தைப் பிடித்துக் கொண்டு வெளிநாட்டவர் ஒருவர் ஆபத்தான முறையில் ஸ்கேட்டிங்  வீலில் பயணிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

சமீப காலமாகவே பள்ளி மாணவர்கள் பேருந்தில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இந்நிலையில் கோவையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் ஆபத்தை உணராமல் அரசு பேருந்தின் பின்புறத்தில் உள்ள ஏணியை பிடித்துக் கொண்டு ஸ்கேட்டிங் வீலில் பயணம் செய்துள்ளார். கோவை என்பது அதிகப்படியான வெளிநாட்டவர்கள் சுற்றுலா வரும் பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டம் என்பதாலும், மிக முக்கிய சுற்றுலாத் தளமான நீலகிரி கோவையை ஒட்டியுள்ளது என்பதாலும் கோவை விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டவர்கள் அங்கிருந்து  சுற்றுலா பயணங்களைத் தொடங்குகின்றனர்.

 

இந்நிலையில் கோவை விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் வேறு பகுதிக்குச் செல்வதற்காக அரசு பேருந்தில் பின்புறம் உள்ள  ஏணி கம்பியைப் பிடித்துக் கொண்டு ஸ்கேட்டிங் வீலில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆபத்தை உணராமல் பயணித்துள்ளார். கோவையின் மிகப் பரபரப்பான சாலைகளில் ஒன்று அவினாசி சாலை. வாகனங்கள் அதிகம் செல்லக்கூடிய அச்சாலையில் வெளிநாட்டவர் இப்படி ஸ்கேட்டிங் வீலில் பயணித்த சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.