Skip to main content

சீவலப்பேரி கொந்தளிப்பு; சமாதானப்படுத்திய சபாநாயகர் அப்பாவு 

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

 Sivalapperi issue Assembly Speaker Appavu made conversation

 

பாளையங்கோட்டையை ஒட்டியுள்ள சீவலப்பேரியில் கடந்த 10ம் தேதியன்று இரவு கூலித் தொழிலாளியான மாயாண்டி (39) என்பவர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை காரணமாக சீவலப்பேரியில் கொதிப்பும் கொந்தளிப்பும் கிளம்பியது. இது குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய தீவிர விசாரணையில் ஏப். 18 அன்று சீவலப்பேரியின் சுடலைமாடசாமி கோவில் பூசாரியான சிதம்பரத்தின் கொலை சம்பவத்தின் தொடர்ச்சியாக மாயாண்டி படுகொலை செய்யப்பட்டது தெரியவர, வல்லநாடு, வசவப்பபுரம், சீவலப்பேரியைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் மூன்று சிறுவர்களும் அடக்கம். மேலும், சிதம்பரம் கொலையில் குற்றஞ்சாட்டியவர்களின் தரப்பின் சாட்சியான பி.டபிள்யு-1வது நபரைக் குறிவைத்ததில் அவர் சிக்காமல் போகவே அவரது உறவினரான மாயாண்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இதனிடையே பாதிக்கப்பட்ட மாயாண்டியின் குடும்பத்தாருக்கு நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடலை வாங்காமல் சாலை மறியல் என 4 நாட்கள் போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் பேசிய வள்ளிநாயகம், துரை உள்ளிட்ட பிரதிநிதிகளின் உடனான பேச்சுவார்த்தையில் கலெக்டரான விஷ்ணு முதற்கட்டமாக தற்காலிகப் பணி தருவதாக தெரிவிக்க அதனை அவர்கள் ஏற்கவில்லை. நிரந்தரப்பணி, நிவாரணம் வேண்டும் என்று தொடர் போராட்டம் நடத்த ஏரியாவில் பதற்றம் நீடித்தது.

 

 Sivalapperi issue Assembly Speaker Appavu made conversation

 

இதனிடையே கொலையான மாயாண்டியின் உறவினர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களிடம் சபாநாயகர் அப்பாவு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சிதம்பரம் மற்றும் மாயாண்டி குடும்பத்தினருக்கு அரசு வேலை, உரிய நிவாரணம் அளிக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு உறுதியளித்தார். அதை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் உடலைப் பெற சம்மதித்ததால் 5 நாட்கள் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. சிதம்பரம் மற்றும் மாயாண்டி இரு குடும்பத்தார்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்து குடும்பத்தினரின் கல்வித்தகுதிக்கேற்ப கிராம உதவியாளர், ரேசன் கடை பணியாளர் அல்லது சத்துணவு பணியாளர் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சபாநாயகர் அப்பாவு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.