Skip to main content

சீவலப்பேரி கொந்தளிப்பு; சமாதானப்படுத்திய சபாநாயகர் அப்பாவு 

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

 Sivalapperi issue Assembly Speaker Appavu made conversation

 

பாளையங்கோட்டையை ஒட்டியுள்ள சீவலப்பேரியில் கடந்த 10ம் தேதியன்று இரவு கூலித் தொழிலாளியான மாயாண்டி (39) என்பவர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை காரணமாக சீவலப்பேரியில் கொதிப்பும் கொந்தளிப்பும் கிளம்பியது. இது குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய தீவிர விசாரணையில் ஏப். 18 அன்று சீவலப்பேரியின் சுடலைமாடசாமி கோவில் பூசாரியான சிதம்பரத்தின் கொலை சம்பவத்தின் தொடர்ச்சியாக மாயாண்டி படுகொலை செய்யப்பட்டது தெரியவர, வல்லநாடு, வசவப்பபுரம், சீவலப்பேரியைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் மூன்று சிறுவர்களும் அடக்கம். மேலும், சிதம்பரம் கொலையில் குற்றஞ்சாட்டியவர்களின் தரப்பின் சாட்சியான பி.டபிள்யு-1வது நபரைக் குறிவைத்ததில் அவர் சிக்காமல் போகவே அவரது உறவினரான மாயாண்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இதனிடையே பாதிக்கப்பட்ட மாயாண்டியின் குடும்பத்தாருக்கு நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடலை வாங்காமல் சாலை மறியல் என 4 நாட்கள் போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் பேசிய வள்ளிநாயகம், துரை உள்ளிட்ட பிரதிநிதிகளின் உடனான பேச்சுவார்த்தையில் கலெக்டரான விஷ்ணு முதற்கட்டமாக தற்காலிகப் பணி தருவதாக தெரிவிக்க அதனை அவர்கள் ஏற்கவில்லை. நிரந்தரப்பணி, நிவாரணம் வேண்டும் என்று தொடர் போராட்டம் நடத்த ஏரியாவில் பதற்றம் நீடித்தது.

 

 Sivalapperi issue Assembly Speaker Appavu made conversation

 

இதனிடையே கொலையான மாயாண்டியின் உறவினர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களிடம் சபாநாயகர் அப்பாவு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சிதம்பரம் மற்றும் மாயாண்டி குடும்பத்தினருக்கு அரசு வேலை, உரிய நிவாரணம் அளிக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு உறுதியளித்தார். அதை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் உடலைப் பெற சம்மதித்ததால் 5 நாட்கள் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. சிதம்பரம் மற்றும் மாயாண்டி இரு குடும்பத்தார்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்து குடும்பத்தினரின் கல்வித்தகுதிக்கேற்ப கிராம உதவியாளர், ரேசன் கடை பணியாளர் அல்லது சத்துணவு பணியாளர் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சபாநாயகர் அப்பாவு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.