Skip to main content

சிரசு விழா... லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு விழாவில் நடந்த கத்திகுத்து!

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் ஆற்றங்கரையோரம் உள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழா மாவட்டத்தில் பிரபலமானது. வேலூர் மட்டும்மல்லாமல் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஆந்திரா சித்தூர், குப்பம் பகுதியில் இருந்தும் மக்கள் இந்த விழாவை காண வருவார்கள்.

 

sirasu Festival ... Millions of people participated in the celebration ceremony!

 

கெங்கையம்மன் கோயிலில் இருந்து அம்மனின் சிரசு (தலைப்பாகம் மட்டும்) ஊர்வலம் வரும். அதன்பின்னால் 5 முதல் 7 குடைகள் அடங்கிய ஊர்வலம் வரும். சிரசை வணங்க லட்சக்கணக்கான மக்கள் கூடுவதால் மாவட்ட நிர்வாகம் இந்த திருவிழாவின்போது உள்ளுர் விடுமுறை விடுவது வழக்கம்.

 

 

அதன்படி கெங்கையம்மன் சிரசு விழா, மே 15 ந்தேதி காலை தொடங்கியது. லட்சத்துக்கும் அதிகமான மக்கள் காலையிலேயே குடியாத்தம் நகரத்தின் முக்கிய வீதிகளில் திரண்டு நிற்க சிரசு ஊர்வலம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த விழாவுக்காக மே 15 ந்தேதியை உள்ளுர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவித்தார். இதனால் மாநில அரசு அலுலகங்கள் மூடப்பட்டுவிட்டன. இதனால் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரண்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த விழாவுக்காக சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளர்.

 

sirasu Festival ... Millions of people participated in the celebration ceremony!

 

அதேபோல், ஆம்பூர் அடுத்த கன்னடிகுப்பத்தில் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் தேர் இழுக்கும்போது அதே பகுதியை சேர்ந்த வினோத் மற்றும் பீமாராவ் என்கிற இருவருக்கு இடையே மோதலாகியுள்ளது. இந்த மோதலில் இருவரும் அடித்துக்கொள்ள ஒருக்கட்டத்தில் பீமாராவ், தன்னிடம்மிருந்த கத்தியை எடுத்து வினோத்தின் வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

 

வினோத் கத்திக்குத்து வாங்கி அலற விழா நிறுத்தப்பட்டு உடனே வினோத்தை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த பகுதி பதட்டமாக போலிஸார் குவிக்கப்பட்டு வேகவேமாக விழா நடத்தப்பட்டுவருகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.