Skip to main content

ரசிகர்களின் கண்ணீருடன் காவல்துறையின் 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம்! (படங்கள்)

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 


ரசிகர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க காவல்துறையின் 72 குண்டுகள் முழங்க பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் தாமரைப்பாகத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

 

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். பின் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த எஸ்.பி.பி-க்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. அதன்காரணமாக மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்தனர்.  தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று (25.09.2020) மதியம் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி பாடகர் எஸ்.பி.பி. காலமானார். பொதுமக்கள் அஞசலிக்காக அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டது. அங்கு திரை உலகினர் அஞ்சலி செலுத்தினர். மாலை சென்னையில் மழை கொட்டியது. திரை உலக பிரபலங்களைத் தாண்டி ஏராளமான பொதுமக்கள் திரண்டு மழையையும் பொருட்படுத்தாமல் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

பின் மக்கள் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் அவரது உடல் திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் இருக்கும் அவரது பண்ண வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அப்படி எடுத்து செல்லப்பட்டபோது ஏராளமான பொதுமக்கள் வழியெங்கிலும் அவர்களது குழந்தைகள் உட்பட குடும்பத்துடன் அவருக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இளைஞர்கள் அவர்களின் இருசக்கர வாகனத்தில் எஸ்.பி.பி.யின் உடல் எடுத்து சென்ற வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர்.

 

 

அந்த இளைஞர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தின் ஹாரனை அழுத்தியபடியும் அவரது பாடலை பாடிக்கொண்டும் சென்றனர். சிலர் எஸ்.பி.பி.யின் உடல் சுமந்துவரும் வாகனத்தை தூரத்தில் பார்த்ததும் வானவேடிக்கைகளை வெடித்தனர். அவருக்கு இசையால் அஞ்சலி செலுத்தும் வகையில் நாதஸ்வர கலைஞர் ஒருவர் நாதஸ்வரமும் வாசித்தார். 

 

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் எஸ்.பி.பி.யின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார். அதனை தொடர்ந்து தமிழக அரசு எஸ்.பி.பி.யின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவித்தது. அதனை தொடர்ந்து அவரது பண்ணை வீட்டில் நான்கு டி.எஸ்.பிக்கள் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவருக்கான மரியாதை செய்யவும் காவல்துறை தயாரானது. 

 

அவரது பண்ணை வீட்டிலும் ஏராளமான பொது மக்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர். திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, நடிகர் விஜய், பாடகர் மனோ உட்பட பல திரைஉலகினர் அஞ்சலி செலுத்தினர். மேலும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் அஞ்சலி செலுத்தினார். பின் அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யும்போது பொதுமக்கள் அனுமதி நிறுத்தப்பட்டது. அந்தநிகழ்வில் அவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் அருகே இருந்து அவருக்கு இறுதிசடங்கு செயதனர். பின் காவல்துறையின் 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி.யின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எஸ்.பி.பி பாடிய பாடல்களில் அவரை தவிர யாரும் பாட முடியாத பாட்டு எது?’ - கவிஞர் வைரமுத்து ருசிகரம்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

NN

 

கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது மேடையில் பேசிய அவர், ''பரத்வாஜ் கிளப் டான்ஸ் மாதிரி ஒரு பாட்டு கொடுங்க சார் என்றார். சும்மா வாய்மொழியாக சொன்னது 'சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய்' இதெல்லாம் சரியா இருக்குமா என்று கேட்டேன். நல்லா இருக்கும் சார் என்று இசையமைத்து காண்பித்தார். எல்லாத்தையும் விட முக்கியமானது இந்திய சினிமா தோன்றி அதிகமான வரிகளால் பாடப்பட்ட பாட்டு 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்'. செஞ்சி மலை மீது அஜித் குமார் பாடிய பாட்டு; சரண் இயக்கிய பாட்டு; நான் எழுதிய பாட்டு 89 வரிகள் கொண்ட பாட்டு; எஸ்.பி.பி பாடிய பாட்டு.

 

எஸ்.பி.பி பாடிய பாடல்களில் அவரை தவிர யாரும் பாட முடியாது என்று நீங்கள் கருதுகின்ற பாட்டு எது என்று ஒரு தொலைக்காட்சி ட்விட்டரில் ஒரு விளம்பரம் கொடுத்தது இன்றைக்கு. நான் ஆச்சரியமாக புரட்டி பார்த்தேன். அதில் சொல்லப்பட்டிருக்கிற முதல் பாட்டு 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ அடுத்து 'சங்கீத ஜாதி முல்லை' அடுத்து 'அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி' அடுத்து 'என் காதலே என் காதலே' நான்கும் என் பாட்டு. இது ஆச்சரியமாக இருந்தது. அதில் முக்கியமான பாட்டு 89 வரிகள் கொண்ட 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டு. திரும்ப தமிழில் இப்படி ஒரு பாட்டு வரவே முடியாது. அந்தப் பாட்டுக்கு இசையமைத்தவர் பரத்வாஜ்'' என்றார்.

 

 

Next Story

100க்கும் மேற்பட்ட சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கிய குடியரசு தலைவர்!

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

PV SINDHU KANGANA RANAUT

 

நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகளை வழங்கும் விழா, டெல்லியில் இன்று (08.11.2021) நடைபெற்றுவருகிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த விழாவில், சாதனையாளர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார்.

 

இந்த விருதுகள் வழங்கும் விழாவில் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. பாடகி சித்ரா, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் நட்சத்திரம் பி.வி. சிந்துவிற்கும் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

இந்திய மகளிர் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் அனிதா, இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், நடிகை கங்கனா ரணாவத், சாலமன் பாப்பையா, பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, தமிழ்நாட்டைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாப்பம்பாள் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

 

இதேபோல் 119 பத்ம விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.