Skip to main content

2000 ரூபாய் நோட்டு: கள ஆய்வில் நக்கீரன் - வெளியான அதிர்ச்சி தகவல்

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

 Shocking information on the 2000 rupee note issue

 

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு, ‘நாளை முதல் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என அறிவித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. வங்கி வாசலிலும், ஏ.டி.எம் வாசல்களிலும் கோடிக்கணக்கான மக்கள் நின்றனர். நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். செல்லாது என அறிவிக்கப்பட்ட தாள்களுக்கு மாற்றாக 2 ஆயிரம் ரூபாய் தாள் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

2023 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுகிறது என அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. மே 24ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தினமும் 10 நோட்டுகள் வரை தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதனைக் கேட்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

 

பெட்ரோல் பங்கில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கிக்கொள்ளப்படும் என அறிவித்தது தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம். அதேபோல் போக்குவரத்துக் கழகங்களிலும் பெற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. 2000 ரூபாய் நோட்டுகள் பெற்றுக்கொள்ளப்படும் என அறிவித்தாலும் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை வாங்குவதில்லை என்பதை நமது நேரடி கள ஆய்வு தெரிவித்தது.

 

நாம் சில பெட்ரோல் பங்குக்கு செய்தியாளர் என்கிற அடையாளம் இல்லாமல் சென்று 2000 ரூபாய் தாள் தந்து 500 ரூபாய்க்கு பெட்ரோல் போடச் சொன்னபோது, 2000 ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்க. 500, 1000 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் சில்லறை தரக்கூடாதுன்னு முதலாளி சொல்லியிருக்காரு என்றார். மற்றொரு பங்கில் 2000 வாங்காதிங்கன்னு முதலாளி சொல்லியிருக்காருங்க. அதனால் வாங்கமாட்டேன் என்றார். இப்படியே எல்லா பங்குகளும் கூறினர்.

 

இது பற்றி ஒரு பெட்ரோல் பங்க் ஊழியர் நம்மிடம், “தினமும் 30 பேராவது 2000 ரூபாய் நோட்டு எடுத்துக்கிட்டு வந்து 100 ரூபாய்க்கோ, 200 ரூபாய்க்கோ பெட்ரோல் போடுங்கன்னு சொல்றாங்க. அவங்க பேங்குக்கு போகத் தயங்கிக்கிட்டு இப்படி நோட்டு மாத்த முயற்சிக்கறாங்க. அதனால் தான் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கறதில்லை. 2000 ரூபாய்க்கு பெட்ரோலோ, டீசலோ போட்டால் வங்கிக்கறோம்” என்றார்.

 

இவர்கள் சொல்வதில் கொஞ்சம் மட்டுமே உண்மை. 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தருகிறேன். ஒரு நோட்டுக்கு 100 ரூபாய் கமிஷன் எனச் சொல்லி ஊருக்கு ஊர் பெரும் கும்பலே சுற்றுகிறது. அவர்கள் சிலர் பெட்ரோல் பங்குகளிலும் உள்ளார்கள். 2000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்படுகிறது என்கிற அறிவிப்பு வந்த அன்றைய இரவே தங்கநகை, டைமண்ட், பிளாட்டினம் விற்பனையகமான ஜுவல்லரிகளில் பெரும் அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட்காரர்கள், பைனான்ஸியர்கள், அரசு அதிகாரிகள் குவிந்தார்கள். ஜி.எஸ்.டி பில் இல்லாமல் நகைகளாக வாங்கினார்கள். திருவண்ணாமலையில் நகைக்கடைக்காரர்கள் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தனியாக கமிஷன் வாங்கினார்கள். அரசியல்வாதிகளிடம் உள்ள பணமெல்லாம் நகைக்கடை, பெட்ரோல் பங்க் வழியாக மாற்றப்படுகின்றன. இதனால் பொதுமக்களிடம் உள்ள 2000 ரூபாய் பணத்தை வாங்க மறுக்கிறார்கள் என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2000 ரூபாய் நோட்டுகள் மாற்ற இன்றே கடைசி!

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

Today is the last day to exchange 2000 rupee notes in banks

 

நாட்டில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. அதன்படி புழக்கத்தில் இருந்த 3.42 லட்சம் கோடி மதிப்பிலான 96 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.  

 

இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவது தொடர்பாக அதிரடி அறிவிப்பு ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பின் படி, “2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8 முதல் ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில்  2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து ரூ.2000 நோட்டை மாற்றுவதற்கான கால அவகாசம் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், ரூ.2000 நோட்டை வங்கிகளில் மாற்ற இன்றே கடைசி நாளாகும். இன்றுக்குள் வங்கிகளில் ரூ.2000 நோட்டை மாற்ற முடியாதவர்கள், நாளை முதல் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ.20,000 வரை ரூ.2000 நோட்டை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள 19 கிளைகளில் தனிநபரோ, நிறுவனமோ ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

முன்னதாக புழக்கத்தில் இருந்த அனைத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் சட்டப்பூர்வ டெண்டர் நிலையைத் திரும்பப் பெற்ற பிறகு, பொருளாதாரத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக, 1934 ஆம் ஆண்டு ஆர்பிஐ சட்டத்தின் பிரிவு 24(1) இன் கீழ் ரூ. 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு நவம்பர் 2016இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில். 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் மற்ற வகைகளில் உள்ள ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்தவுடன் நிறைவேற்றப்பட்டது. அதனால், 2018-19ல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

Next Story

ரூ. 2 ஆயிரம் நோட்டுகள்; ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Rs.2 thousand notes RBI Action Notification

 

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்திருந்தது. புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. அதன்படி புழக்கத்தில் இருந்த 3.42 லட்சம் கோடி மதிப்பிலான 96 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதே சமயம் 14 ஆயிரம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இதுவரை வங்கிகளுக்குத் திரும்ப வரவில்லை என்ற தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவது தொடர்பாக அதிரடி அறிவிப்பு ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, “2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8 முதல் ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில்  2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக புழக்கத்தில் இருந்த அனைத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் சட்டப்பூர்வ டெண்டர் நிலையைத் திரும்பப் பெற்ற பிறகு, பொருளாதாரத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக, 1934 ஆம் ஆண்டு ஆர்பிஐ சட்டத்தின் பிரிவு 24(1) இன் கீழ் ரூ. 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு நவம்பர் 2016இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில். 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் மற்ற வகைகளில் உள்ள ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்தவுடன் நிறைவேற்றப்பட்டது. அதனால், 2018-19ல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.