Skip to main content

பாசனவாய்க்காலில் கழிவுநீர்... கோட்டாட்சியரை சந்தித்த 5 ஊராட்சி மன்ற தலைவர்கள்!

Published on 21/01/2022 | Edited on 21/01/2022

 

Sewage in the irrigation canal ... 5 panchayat leaders who met official

 

சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியை புவனகிரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் வாசுதேவன் தலைமையில் 5  ஊராட்சி தலைவர்கள் சந்தித்து மனு அளித்தனர். அதில்  சிதம்பரம் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுநீரை மணலூர் பகுதியில் சுத்திகரிப்பு செய்து சிவகாம சுந்தரி பாசன வாய்க்காலில் விடப்படுகிறது சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் கழிவுநீர் முழுவதுமாக பாசன வாய்க்காலில் விடப்படுகிறது.

 

இதனால் பாசனத்திற்கு செல்லும் நீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. மேலும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கிராம பகுதிகளில் உள்ள கால்நடைகள் குடிநீர் குடிக்க முடியாமல் உள்ளது.

 

கழிவுநீர் கலப்பதால் தில்லைநாயகபுரம், கீழமூங்கிலடி, தையாகுப்பம், அம்பலத்தாடி குப்பம், அ.மண்டபம், மேல்மாம்பட்டு, சி.முட்லூர், கீழ் அனுவம்பட்டு, அம்பு பூட்டிய பாளையம், நவாப் பேட்டை, சாலக்கரை, ரயிலடி, பு.மடுவாங்கரை ஆகிய கிராமபகுதிகளில் உள்ள பாசனவாய்கால் பாதிக்கப்படுகிறது. எனவே கழிவுநீர் பாசன வாய்க்காலில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

 

இவருடன் தேமுதிக மாவட்ட துணை செயலாளர் பானுசந்தர், ஒன்றிய கவுன்சிலர் லதா ராஜேந்திரன், சி.முட்லூர் ஊராட்சி மன்ற தலைவர் வேதநாயகி பஞ்சநாதன், கீழமூங்கிலடி ஊராட்சி மன்ற தலைவர் சுடர்விழி அன்பரசன், மேல் அனுவம்பட்டு தவமணி மருதப்பன், கீழ் அனுவம்பட்டு மாரியம்மாள் ஜெகதீசன், தில்லை நாயக புரம் மகாவதி நாகூரான், கீழ் அனுவம்பட்டு ஊராட்சி மன்ற துணை தலைவர் சரவணன், கீழமூங்கிலடி துணைத் தலைவர் தீபா காசி முருகன் உள்ளிட்ட கிராமங்களின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உயிருக்கும் ரிஸ்க்; நீர் நிலைக்கும் கேடு' - எல்லை மீறும் இன்ஸ்டா ரீல் அடிக்டர்ஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'Living Risk; Insta-reels that defy water levels

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

காவல்நிலையத்தின் வாயில்களில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காவல்நிலையத்திலிருந்து வெளியே வருவதுபோல ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. இவ்வாறு விதிமீறலில் ஈடுபட்ட இன்ஸ்டா ரீல் வெளியிடும் இளைஞர்கள் அவ்வப்போது கைதாகும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மதுரையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. மதுரை வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் நண்பர்கள் உதவியுடன் வைகை ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அந்த நெருப்பிற்கு நடுவில் அந்த இளைஞர் குதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பாலியல் வன்கொடுமை‌; தீட்சிதர் தலைமறைவு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Woman molested in Chidambaram Nataraja Temple; Dikshitra disappeared

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை‌க்கு ஆளாக்கப்பட்ட நிலையில் தலைமறைவான தீட்சிதரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு கோபுர வாயிலில் இயங்கி வரும் அன்னதான கூடத்தில் சிதம்பரம் அருகே சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கவிதா(46) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் பணி செய்து வருகிறார். தெற்கு சன்னதியில் வசிக்கும், நடராஜர் கோவிலில் தீட்சிதராகப் பணியாற்றும் மணிகண்டன் என்கிற கிருஷ்ணசாமி தீட்சிதர். கவிதா தெற்கு சன்னதியில் வேலைக்கு தனியாக வரும்போது சேலையை இழுத்து அவரது மேல் சட்டை மீது கை வைத்து பாலியல் சீண்டலில் கிருஷ்ணசாமி தீட்சிதர்  ஈடுபட்டுள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த அந்தப் பெண் சிதம்பரம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கிருஷ்ணசாமி தீட்சிதரை தேடி வருகின்றனர். நடராஜர் கோவில் தீட்சிதர் வேலைக்குச் சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.