Skip to main content

காதலித்து ஏமாற்றிய இளைஞருக்கு ஏழாண்டு சிறை

Published on 29/07/2022 | Edited on 29/07/2022

 

Seven years in prison for a young man who cheated in love!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், பால்ராம்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கும் பூட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண்ணுக்கும் அறிமுகமாகி இருவரும் நாளடைவில் காதலித்துள்ளனர். இருவருக்கும் இடையே மிக நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. பெரியசாமி, இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக சொல்லியுள்ளார். ஆனால், சொன்னபடி திருமணம் செய்துகொள்ளாமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

 

இதனால் இளம் பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி பெரியசாமி வீட்டுக்கு சென்று வலியுறுத்தி உள்ளார். அப்போது பெரியசாமி, ‘உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்’ என்று மறுத்துள்ளார். மேலும், பெரியசாமி மற்றும் அவரது தந்தை மாரி, தாய் சந்திரா, உறவினர் கருப்பு துரை ஆகியோர் சேர்ந்து அந்தப் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.


இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மற்றும் அவரது உறவினர்கள் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர். அதன் பேரில் பெரியசாமி உள்ளிட்ட அவரது உறவினர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி (பொறுப்பு) சாந்தி, நேற்று தீர்ப்பு வழங்கினார். 


அந்தத் தீர்ப்பில் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய பெரியசாமிக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மூன்று லட்ச ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற மூன்று பேர் மீதும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.