Skip to main content

கட்டிய மனைவியை விரட்டிய கணவர் இளம்பெண்ணுடன் தலைமறைவு... போலீசார் விசாரணை

Published on 19/07/2020 | Edited on 19/07/2020
cuddalore

 

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்துள்ளது சித்தமல்லி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் 32 வயது சந்திரவேலு. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது உள்ள இந்துமதி என்பவரை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

 

இந்த தம்பதிகளுக்கு கடந்த நான்காண்டுகளாக குழந்தையில்லை. இதனால் சந்திரவேலுவின் தாய் வேம்பு, தந்தை சக்கரவர்த்தி, சந்திரவேல் ஆகியோர் இந்துமதியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்பு இந்துமதி, நாம் இருவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வோம். இதில் யாருக்கு எந்த குறைபாடு இருந்தாலும் மருத்துவர்கள் சரி செய்வார்கள். பிறகு குழந்தை  இருக்கும் என்று கூறியதோடு கணவரை  மருத்துவர் பரிசோதனைக்கு அழைத்துள்ளார்.

 

இதற்கு சந்திரவேலு மறுப்பு தெரிவித்ததோடு அவர் தாய் தந்தையை ஆகியோருடன் சேர்ந்து இந்துமதியை தாக்கி திட்டி மிரட்டி அவரது தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இந்த நிலையை பயன்படுத்தி கொண்ட சந்திரவேலு, அவரது எதிர் வீட்டை சேர்ந்த கங்காசலம் என்பவரது 26 வயது மகள் கமலா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

 

அந்த கமலாவை மனைவி வீட்டில் இல்லாததை பயன்படுத்தி கொண்டு சந்திரவேலு தன் வீட்டிற்கு அழைத்து வந்து திருமணம் செய்யாமலேயே கமலாவுடன் கணவன் மனைவி போல குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த தகவல் இந்துமதிக்கு தெரியவரவே, அவர் சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் சம்பந்தமாக புகார் கொடுத்துள்ளார்.

 

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த மகளிர் போலீசார், சந்திரவேலு அவரது தாயார் வேம்பு, தந்தை சக்கரவர்த்தி, சந்திரவேலுடன் தாலி கட்டாத மனைவியாக வாழ்ந்து வந்த கமலா ஆகிய நால்வரையும் கைது செய்வதற்காக தேடிச் சென்றுள்ளனர். அதற்குள் அவர்கள் நால்வரும் தலைமறைவாகிவிட்டனர். தலைமறைவாகி உள்ள அவர்களை சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.