Skip to main content

உணவகம் என்ற பெயரில் பாலியல் தொழில்; போலீஸின் நடவடிக்கையால் அம்பலமான உண்மை

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

sensational incident at Velankanni

 

உணவகம் என்ற பெயரில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த சம்பவம் வேளாங்கண்ணி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள முச்சந்தி பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் சேகர் உணவகம் என்கிற பெயரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த ஹோட்டல் பிசினஸும் தடபுடலாக நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், இந்த ஹோட்டல் மாடியில் இளம்பெண்னை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக வேளாங்கண்ணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

 

அதன்பேரில், சம்மந்தப்பட்ட இடத்திற்கு மாற்று உடையில் சென்ற போலீசார், அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, போலீசாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் திடீரென ஹோட்டலுக்குள் புகுந்து, அங்குள்ள அறைகளை சோதனை செய்ததில், அந்த ஹோட்டலில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்துவந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த ஹோட்டல் உரிமையாளரான பக்கிரி சாமியை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதன்பிறகு, அந்த ஹோட்டலில் இருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த இளம்பெண்ணை அங்குள்ள காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

 

இந்நிலையில், பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தளமான வேளாங்கண்ணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான லாட்ஜ்க்கள் இருக்கின்றது. அத்தகைய லாட்ஜ்கள் அனுமதியோடும் அனுமதியில்லாமலும் இயங்கி வருகிறது. அதே சமயம், இவற்றில் பெரும்பான்மையான லாட்ஜ்களில் பாலியல் தொழில் நடைபெற்று வருகிறது. இது காவல்துறையினருக்கும் நன்றாகத் தெரியும் எனக் கூறப்படுகிறது. அவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு இதைக் கண்டும் காணாததும் போல் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் வேளாங்கண்ணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.