Skip to main content

வங்கியிலிருந்து தங்கக் கவசத்தை யார் எடுப்பார்கள்..? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதில்

Published on 24/10/2022 | Edited on 24/10/2022

 

Sellur Raju answered onMuthuramalinga Thevar issue

 

மருது சகோதரர்களின் 221வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அதன்படி இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மருது சகோதரர்களுக்கு மரியாதை செலுத்தினார். அதன்பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது செய்தியாளர்கள் முத்துராமலிங்கத் தேவருக்கு அதிமுக சார்பில் அணிய வேண்டிய தங்கக் கவசம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “தங்கக் கவசத்தை ஜெயலலிதா கொடுக்கும்போதே. இது அதிமுகவினுடையது என்றும், இதனை அதிமுகவின் பொருளாளரும், பசும்பொன்னாரின் நினைவு அறக்கட்டளையில் இருப்பவரும் இணைந்து இந்தத் தங்கக் கவசத்தை ஆண்டுதோறும் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலைமைதான் தொடர்ந்துவந்தது. ஆனால், 2017ல் இதேபோல், கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் உரிமை கொண்டாடினார்கள். எடப்பாடி முதலமைச்சராக இருந்த அந்த நேரத்தில் வீணாக சர்ச்சை வேண்டாம் என்று, மதுரை மாவட்ட ஆட்சியர் எடுத்துகொடுத்து ராமநாதபுரம் ஆட்சியர் பெற்று அதனை அணிவித்தனர். 

 

தற்போது ஓ.பி.எஸ். கட்சியிலிருந்து விலகியபிறகு அதிமுகவின் பொதுக்குழுவால் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது அதிமுக கட்சி தொடர்பான பணபரிவர்தனையை இந்தியன் வங்கியில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

மதுரையில் உள்ள இந்தியன் வங்கி தற்போதைய அதிமுக பொருளாளருக்கு முழுமையாக பாத்தியப்பட்டது. எனவே அவர் எடுக்கலாம் என ஆர்.பி.ஐ. விதிமுறைகளும், இந்திய அரசும் சொல்கிறது. எடப்பாடியால் அனுப்பிவைக்கப்பட்ட பொருளாளரும், அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதனும், மதுரை திருமங்கலம் அதிமுக எம்.எல்.ஏ மற்றும் நான் அனைவரும் சென்று வங்கியில் அதிமுகவின் பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்க வேண்டும் என சொல்லியிருந்தோம். அவர்களும், ‘நீங்கள் எடுத்துகொள்ளலாம். முத்துராமலிங்கத் தேவர் அறக்கட்டளையில் இருந்துவந்து ஒருவர் கையெழுத்து போட்டால் போதும்’ என்று தெரிவித்திருக்கிறார்கள். 

 

அதேபோல், அதிமுகவில் உள்ள முக்குளத்தைச் சார்ந்த அனைத்து தலைவர்களும், எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சர்கள் என அனைத்து நிர்வாகிகளும் பசும்பொன்னுக்கு சென்று அங்கு அறக்கட்டளையில் விவரத்தை எடுத்து சொல்லி நீதிமன்ற தீர்ப்பையும் காட்டினோம். அவர்கள் நிச்சயம் வருவதாக தெரிவித்துள்ளனர். 

 

அதேசமயம், எங்களுக்கும் பல நெருக்கடிகள் உள்ளன. முக்கியமாக நீதிமன்றம் வரும் 26ம் தேதி கொடுக்கும் தீர்ப்பைத் தொடர்ந்து அனைத்தையும் நாங்கள் பின்பற்றுவோம். நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று நடப்போம்” என்று தெரிவித்தார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.