Skip to main content

“சாதி, மதம், இனம் எங்களுக்குக் கிடையாது..” -  சீமான் 

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

Seeman speech in nellai

 

தமிழ் தேசிய தன்னுரிமைக் கட்சியின் தமிழ் மக்கள் தன்னாட்சி மாநாடு ஜூலை 24 அன்று பாளையங்கோட்டையில் நடந்தது. அக்கட்சியின் தலைவர் வியனரசுவின் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையுரையாற்றினார். இதில் ஜீவாகனி, சுகந்தி, மை.பா.ஜேசுராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். 

 

Seeman speech in nellai

 

ஜீவாகனி, “இப்போது மாநிலவாரியாக தன்னாட்சி பற்றி பேச ஆரம்பித்து விட்டன. ஐ.நா சபையின் ஆர்ட்டிக்கிள் 12 உட்பிரிவு (1)ன் படி ஒரு பரப்பில் வாழ்கிற மக்களின் பண்பாடு, கலாச்சாரம் அரசியல் மற்றும் தன்னாட்சி காப்பாற்றப்பட வேண்டும் மக்களின் எண்ணம் அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்கிறது. சர்வதேச சமூக தேசிய தன்னுரிமைத் திட்டம் போட வேண்டும். மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி பேச்சோடு போய்விட்டது” என்று பேசினார்.  

 

Seeman speech in nellai

 

சுகந்தி, “தமிழ் நாடு தமிழர்க்கே. நான் தமிழர். இந்த மண்ணின் மைந்தன் நான். நாம் தான் ஆளவேண்டும். தன்னாட்சி வேறு, சுயாட்சி வேறல்ல, இரண்டும் ஒன்று தான். 2026ல் தமிழ் நாடு தமிழர்க்கே, என்ற நிலை வரும். சட்டமன்றங்களில், தீர்மானங்களால் ஏமாற்றப்பட்டுள்ளோம். அணை மசோதா என்று வந்தால் தண்ணீர் கிடைக்காமலே போய்விடும். நம்முடைய உரிமையைப் பெற வேண்டும். அது தான் தன்னாட்சி. 3600 கிலோ மீட்டர் கடல் அதானிக்குக் குத்தகை வழியில் சொந்தமாகி விட்டது. அங்கே போய் தமிழன் மீன் பிடிக்க முடியுமா. இது ஒரு அரசாங்கம் செய்யவேண்டிய காரியமா. நம்முடைய உரிமைகள் நம்மை விட்டுப் போகிறது. மத்திய அரசு, குத்தகையை, நான் தான் பண்ணுவேன் என்கிறது அதனால் தான் நீட் தமிழக அரசின் கையில் இல்லை. எனவே தான் ஒவ்வொரு மசோதாவிலும் நம் உரிமைகள் மறுக்கப்படுகிறது. வரலாற்றை மீண்டும் உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அரசியல், பண்பாடு கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டும் அதிகாரம் முழுவதையும் மத்திய அரசு எடுத்துக் கொண்டால் மாநிலத்தில் எப்படி ஆட்சி நடத்துவது. தன்னாட்சி அதிகாரம் வந்த போது தான் இந்த சுயாட்சித் தீர்மானம் நிறைவேறும். அதற்கு உதாரணம் தான் கல்வி” என்றார். 

 

Seeman speech in nellai

 

மை.பா.ஜேசுராஜன், “இந்தியா என்ற தேசம் வேண்டும். அதை ஒரு பெரிய கட்சி நல்லபடியாக வழி நடத்த வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சி செய்த தவறை விட, இப்போதைய பா.ஜ.க. அரசு அதிகமாகவே செய்கிறது. இந்திய தேசம் அது மிகப் பெரிய சந்தை. இரண்டு பேருக்கு மட்டுமே லாபம். வியாபாரிகள். கார்ப்பரேட்களுக்குத் தேவை. ஆகவே தான் அது அரசியல்வாதிகளுக்கு வேட்டைக் களமாகிறது. இப்போது தன்னாட்சியை வைத்துத்தான் தங்கள் ஆட்சியை நடத்துகிறார்கள். இந்துத்துவாவுக்கு ஒரு மாற்று வேண்டும். மதமும் சாதியும் திணிக்கப்படுகிறது” என்றார்.

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், “தமிழ் தேசிய அரசியல் கொள்கை தான் என் உயிர். அதற்காகத்தான் நம்முன்னோர்களான பூலித்தேவன், வேலு நாச்சியார், அழகுமுத்துக்கோன் போன்றவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னே போராடியுள்ளனர். அதை நாம் முன்னெடுக்க வேண்டும். தமிழ் திருத்தாய் பெற்ற தமிழ்நாடு. இது என் தேசம். உரிமைகளைக் கேட்டால் கிடைக்காது போராடித்தான் பெற வேண்டும். நாம் சிங்கங்கள் அல்ல புலிகள். எங்கள் அதிகாரம் எங்கள் மக்களுக்கானது. நமது நாட்டை நாமே ஆளலாம். புரட்சியாளர் அம்பேத்கர் கூட தமிழ் இனத்திற்குத்தான் என்று சொன்னார்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திர வீரனாகச் சாவதே மேல். நாம் சாகலாம். உரிமைகள் சாகக் கூடாது. மானமே பெரிது. வெற்றிவேல், வீரவேல் என்று வெள்ளைக்காரனை எதிர்த்துப் போராடினார்கள். உங்களுக்குப் போதிக்கும் போது புரியாது. ஆனா பாதிக்கும் போது புரியும்.

 

Seeman speech in nellai

 

உலகத்தில் எத்தனையோ இனமிருந்தாலும் தமிழ் இனம் போன்று ஒன்றில்லை. காக்கை, குருவி, எங்கள் சாதி. சாதி, மதம், இனம் எங்களுக்குக் கிடையாது. புதிதாக நான் எதுவும் சொல்லவில்லை. நான் வரலாற்றுப்படி சொல்கிறேன். வரலாறு என்பது கடந்த காலத்தைப் படிப்பது அல்ல, அது நிகழ் காலத்தை உணர்த்துவது வரலாற்றைப்படி. நாடு என்னுடையது. நீ யார் ஒதுக்கிக் கொடுக்க. பிச்சை புகினும் கற்கை நன்றே. மொழிக்கேற்ப வாழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அவர் படிக்கல்ல. அவர் பல ஆயிரம் பள்ளிகளைத் திறந்தவர்.


இயற்கை குடிச்சுக்க, குடிச்சுக்கோன்னு தூய நீரா கொட்டுது. அதை கர்நாடகாக்காரன் ஒரு ஓரமா கொண்டு போயி வைச்சுக்கிட்டு கோடி கோடியாய் விலை பேசுறான். மனித உடலுக்கு ரத்த நாளம் போல, நதிகள் நாட்டுக்கு ரத்த நாளம். அணையக் கட்டிக்கிட்டு அது எனக்குத் தான்றான். இந்த சலசலப்புக் கெல்லாம் பனங்காட்டு நரி அஞ்சாது.


கடல் அலை. சூரிய ஒளி, காற்றாலையில் மின்சாரம் தயாரிப்பு மாசு இல்லை. ஆனா அணு உலை மூலம் மின்சாரம் தயாரிப்பு மாசு. அதானிகையில். ஏன் கல்வி, அது ஒன்றியம் கையில். அதனால் தான் மாநிலங்களுக்குத் தன்னாட்சி வேண்டும் என்று சொல்றோம். என் நிலம் என் இனம். என் உரிமை ஆனா நீ முணு இனத்திற்கு ஜி.எஸ்.டி. வரி. சாலை வரி, வீட்டு வரி, தண்ணி வரி, எல்லாத்துக்கும் வரி, 90 லட்சம் கோடி, ஒன்பதாயிரம் கோடின்னு வரி. 75 விழுக்காடு வரியாகப் போகிறது. எட்டு ஆண்டுகளில் அம்பானியையும் அதானியையும் வளர்த்து விட்டார்கள். சட்டங்கள், திட்டங்கள், அந்த நாட்டு மக்களுக்காக, அவர்கள் எண்ணப்படி இருக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் விடுதலை பெற வேண்டும். நாங்கள் போராடுவது சாவதற்கல்ல. எங்கள் இனத்தைக்காப்பாற்ற” என்று பேசினார். 

 

இந்த மாநாட்டில், தாமிரபரணி ஆற்றுநீர் உரிமை, வெள்ள நீர்க்கால்வாய் திட்டம், மதுக்கடைகள் மூடல், அயல் மாநில வணிகர்களுக்குத் தடை, அயலார் குடியேற்றத்தடுப்பு உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிவேற்றப்பட்டன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்