Skip to main content

'எங்களையும் மனிதர்களாகப் பாருங்கள்' - காட்டுநாயக்கர் சமூக மக்களின் கோரிக்கை!

Published on 24/11/2020 | Edited on 24/11/2020

 

 See us as human beings too

 

"சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள காட்டு நாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த சமுதாய மாணவர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும்" என மன்னார்குடியில் நடந்த காட்டுநாயக்கர் சமுதாயக் கூட்டத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.

"தமிழகத்தில் முப்பத்தி ஆறு பழங்குடிச் சமூகத்தவர்கள் உள்ளனர். இவர்களில் தோடர், கோத்தர், குறும்பர், பனியர், இருளர், காட்டுநாயக்கர் ஆகிய ஆறு சமூகத்தவர்களும் தொன்மைப் பழங்குடி குழுக்கள் என அரசு வரையறை செய்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான காட்டு நாயக்கர் சமூகத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். விளிம்பு நிலையில் வாழ்ந்து வரும் அந்தச் சமூகத்து மக்கள் பன்றிகள் மேய்ப்பதும், குறி சொல்லுவதும், பாசி மணிகளை விற்றும் தங்களின் காலத்தைக் கழிக்கின்றனர். கூலி வேலைக்குச் செல்ல நினைத்தாலும், சாதியைக் காரணம் காட்டி இதர சமுதாய மக்கள் வேலை கொடுப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும் அந்த வேலை குதிரை கொம்பான காரியமாக மாறிவிடும்.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்துவரும் அந்த மக்களுக்குக் கல்வி என்பது எட்டாக்கணியாகவே இருக்கிறது. கடைநிலையில் வாழும் காட்டு நாயக்கர் சமூகத்தினர், பத்தாம் வகுப்பை தாண்டியவர்களை தமிழக அளவில் விரல்விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்ட துயரமான அவல நிலையே இன்று வரை நீடித்து வருகிறது. இதற்கு சாதிச் சான்றிதழே தடைக்கல்லாக இருக்கிறது. எங்களையும் மனிதர்களாக பாவிக்க அரசும், இந்தச் சமுகமும் முன்வரவேண்டும்," என்கிறார்கள் அந்தச் சமுதாயத் தலைவர்கள்.

 

 See us as human beings too


அரசாணைப்படி பழங்குடியின எஸ்.டி.பட்டியலிலுள்ள காட்டு நாயக்கர் சமூகத்தினர், தாங்களும் உயரவேண்டும், தங்களது குழந்தைகளையும் படிக்க வைக்க வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் இவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கவும் வேலைவாய்ப்பினைப் பெறவும் சாதிச் சான்று ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கிறது. அதனை அரசு தடையின்றி வழங்கிட வேண்டும் என்பதே அந்தச் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.

அந்தக் கோரிக்கையை முன்வைத்தே, "தமிழ்நாடு காட்டு நாயக்கன் சீர்திருத்தச் சங்கத்தின் பேரவை கூட்டம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைப்பெற்றது. அந்தக் கூட்டத்திற்கு, "முப்பத்திஆறு உட்பிரிவுகளை உள்ளடக்கிய சமூகத்தில், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள, காட்டு நாயக்கர் சமூக மாணவர்களுக்கு எஸ்.டி பிரிவில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும், 1 சதவீத இட ஒதுக்கீடை உயர்த்தி, கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும். அரசின் நலத் திட்டங்கள் மற்றும் சலுகைகளைப் பெற சாதிச் சான்றிதழ் அவசியம் என்பதால், அந்தச் சான்றிதழைப் பெற விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தி நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நகரத்திலும் அரசு சார்பில் சமுதாயக் கூடம் கட்டித் தரவேண்டும், மன்னார்குடி அருகே உள்ள மூவாநல்லூர், இரட்டைக் குளம் சுடுகாடுகளில் காட்டு நாயக்கர் சமூகத்திற்கு என எரியூட்டும் கட்டிடம் கட்டித் தர வேண்டும். நல வாரியத்தின் மூலம் பார பட்சமின்றி நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்களை அரசுக்கு முன்வைத்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சீர்மரபினர்களுக்கு முக்கிய அறிவிப்பு; தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Important order issued by the Chief Minister of Tamil Nadu for denotified communities

சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு, Denotified Communities மற்றும் Denotified Tribes என இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய ஆட்சியில் குற்றப் பரம்பரை சட்டத்தினால் பாதிக்கப்பட்ட வகுப்பினர்கள், சீர்மரபினர் வகுப்பு 6T60T வகைப்படுத்தப்பட்டு மிகப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருடன் சேர்த்து 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு 68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசால் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 29.7.2008இல் அரசாணை (நிலை) எண்.85-இல் தமிழ்நாடு சட்டம் 45/1994இன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டு, சீர்மரபினர் வகுப்பினர் எனச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

பின்னர், அரசாணை (நிலை).26. பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள் 8.3.2019இல் வெளியிடப்பட்ட ஆணையில், மாநில அரசின் 20 சதவீதம் இட ஒதுக்கீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் என அழைக்கப்படுவர் எனவும் ஒன்றிய அரசின் நலத்திட்ட பயன்களைப் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் என அழைக்கப்படுவர் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட அரசாணைகளின்படி இரண்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவற்றைப் பெறுவதில் நடைமுறையில் சிரமம் உள்ளதாகவும் அதற்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அந்த கோரிக்கைகளை அரசு ஆய்வு செய்து, சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு இரண்டு சான்றிதழ்களுக்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க தெளிவுரைகள் வழங்குமாறு தமிழக முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய தெளிவுரையின்படி இனி வருவாய் அலுவலர்கள், வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்குவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'சாதி, மதம் இல்லை' சான்றிதழ் பெற்ற தம்பதிக்கு குவியும் பாராட்டு! 

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

Congratulations to the couple who got the certificate without any caste or religion!

 

விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக சாதி, மதம் இல்லாதவர்கள் என்று சான்றிதழ் வாங்கிய தம்பதிக்கு பாராட்டுகள் குவிகின்றன. 

 

தேவர்குளம் பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும், அவரது மனைவி சர்மிளாவும் சாதி, மதம் இல்லாதவர்கள் என்று சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், அதற்கான சான்றிதழ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே இதுவரை ஏழு பேர் சாதி, மதம் இல்லாதவர்கள் என்ற சான்றிதழ் பெற்றிருக்கும் நிலையில், அதில் ஆறு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 

 

தங்களைப் போன்று தங்களது குழந்தைகளுக்கும் சாதி, மதம் இல்லாதவர்கள் என்று சான்றிதழ் கிடைக்க விண்ணப்பிக்க இருப்பதாக கார்த்திகேயன் தெரிவித்தார்.