Skip to main content

நேரு உள்விளையாட்டரங்கில் காவலர் தற்கொலை!

Published on 03/08/2022 | Edited on 03/08/2022

 

Security guard  in Nehru indoor stadium!

 

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இறுதி நிகழ்ச்சி மீண்டும் பிரமாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், விளையாட்டரங்கில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

அண்மையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கிய உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியானது தற்போது மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் நிறைவு விழா மீண்டும் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா மேடைக்கு வருகின்ற வழியில் சென்னை ஆயுதப்படை காவலர் செந்தில்குமார் என்பவர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

 

இந்நிலையில் கழிவறைக்குச் சென்ற செந்தில்குமார் வெளியே வரவில்லை. திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் அருகில் இருந்த மற்ற காவலர்கள் ஓடிச் சென்று கதவை உடைத்துப் பார்த்தனர். அப்பொழுது செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். ஆயுதப்படை காவலர் செந்தில் குமார் தன் கையில் வைத்திருந்த எஸ்எல்ஆர் ரக துப்பாக்கியை கொண்டு நெஞ்சில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.  உடனடியாக அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த சில தினங்களாக மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகவும், அதனால் செந்தில்குமார் மன உளைச்சலிலிருந்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தற்கொலை தொடர்பாக மேலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அதேபோல் கடந்த 26 ஆம் தேதி முதல் பாதுகாப்பு பணியில் இருக்கும் செந்தில்குமார் விடுப்பு கிடைக்காத சூழலில் இருந்ததால். அது அவரது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.