Skip to main content

ரகசியமாக அதிமுக வேட்பாளர் முன்னிலையில் தபால் வாக்கு போட்ட போலிஸார்

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

மதுரை பாராளுமன்ற தேர்தலில் போலிஸாருக்கான தபால் ஓட்டு பதிவு புதன் அன்று காலை காவல்துரை ஏ.ஆர் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. அது திடீரென மதுரை மீனாட்சி கல்லூரிக்கு மாற்றபட்டு, காலை 9 மணிக்கு தொடங்கியது..

 

மதுரை நகர் போலிஸார் 1912ம் புறநகர் போலிஸாரும் சேர்த்து 2815 பேர் வாக்களிக்க இருந்தனர்.

 

election

 

சிறிது நேரத்தில் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் வாக்கு நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவரை உள்ளே அழைத்து வந்த காவல்துறை அதிகாரிகளிடம் வெகுநேரம் பேசிகொண்டிருந்தார். பின்பு அங்கு ஓட்டு போட நின்று கொண்டிருந்தவர்களிடம் வாக்கு கேட்டார். அதை படம் பிடிக்க நாம் முயன்றபோது நம்மை போலிஸார் அனுமதிக்கவில்லை. ஆனால் அவரை மட்டும் உள்ளே அழைத்து சென்றதை பற்றி போலிஸாரிடம் கேட்டதற்கு இதுக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது என்க..

 

election

 

நாம் ராஜ்சத்தியனிடம் விதியை மீறி ஓட்டு கேட்கலாமா? என்க அதற்கு சிரித்து கொண்டே அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதை ஆட்சியர் நடராசனிடம் கேட்டோம் அதற்கு அவர் போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டு பதிவு மையத்தை பார்வையிடலாம் ஆனால் ஓட்டுதான் சேகரிக்க கூடாது எனக்கூறினார். அதிமுகவேட்பாளர் ''ஓட்டு கேட்டாரா அப்படி எதுவும் புகார் தெரிவிக்கவில்லையே யாரும்'' என்று வேகமாக இடத்தை காலி செய்தார் கலெக்டர் நடராசன்.

 

 

நாம் இதுகுறித்து கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனிடம் தொடர்புகொண்டு கெட்டபோது, இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் சட்டபடி நடவடிக்கை எடுக்க வழியுறுத்துவோம். மேலும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கான படிவமே கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள் என்று ஜக்டோ ஜியோ மற்றும் அரசு பணியாளர்கள் ஆளும் கட்சிக்கு எதிராக ஓட்டளிப்பார்கள் என்ற யூகத்தால் அவர்களை இழுத்தடிப்பது பற்றியும் சட்டபடி கட்டாயம் நடவடிக்கை எடுப்போம். சிலைக்கு மாலை போட்டதற்கே என் மேல் வழக்கு போட்டவர்கள் தேர்தல் விதி மீறி ராஜ்சத்யன் போலிஸாரிடம் ஓட்டு கேட்டதும், அவரை  போலிஸாரே உள்ளே அழைத்து சென்று கேன்வாஸ் செய்ததும் என்ன நியாயம் இதை சும்மா விடமாட்டோம் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.