Skip to main content

திடீரென சாலை மறியல் செய்த பள்ளி மாணவர்கள்

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

 School students who suddenly blocked the road

 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே முறையாகப் பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவிப்பதாகப் பள்ளி மாணவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து கோவில்பட்டி வழியாகச் சாத்தான்பாடிக்கு தினசரி ஐந்து முறை அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த ஒரு வார காலமாக பள்ளி நேரங்களில் காலை மற்றும் மாலை வேளையில் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

 

தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் எனக்கு கோரிக்கை வைத்து திடீரென நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து நத்தம் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முறையாகப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திண்டுக்கல் மருத்துவரிடம் 51 லட்சம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

51 lakh bribe to Dindigul doctor; The enforcement officer caught red-handed

 

திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் பாபு. கடந்த 2018 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சுரேஷ் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு மதுரை அமலாக்கத்துறைக்கு சென்றது. மதுரை அமலாக்கத்துறைக்கு பதவி உயர்வு பெற்று வந்த அங்கித் திவாரி என்ற அதிகாரி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மருத்துவர் சுரேஷ்பாபுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வருமானத்திற்கு அதிகமாக நீங்கள் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கின் விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டுமானால் மூன்று கோடி ரூபாய்  லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.

 

முதலில் இதற்கு சுரேஷ்பாபு தர மறுத்துள்ளார். ஆனால் தொடர்ந்து திவாரி தரப்பில் பேச்சுவார்த்தையில் நடைபெற்றது. இறுதியாக 51 லட்சம் ரூபாய் கண்டிப்பாக தரவேண்டும் என மிரட்டி உள்ளார் அமலாக்கத்துறை அதிகாரி திவாரி. இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக மதுரை - நத்தம் சாலையில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி 20 லட்சம் ரூபாயை முதல் தவணையை லஞ்சமாக கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மீதி உள்ள தொகையை கேட்டுள்ளார் அங்கித் திவாரி.

 

மீண்டும் மருத்துவர் சுரேஷ் பாபுவை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து நேற்று திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சுரேஷ் பாபு புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் துணையோடு ரசாயனம் தடவியே 20 லட்சம் ரூபாயை பேக்கில் வைத்து இன்று காலை திண்டுக்கல் - மதுரை சாலையில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு கொடுக்கும் பொழுது கையும் களவுமாக அமலாக்கத்துறை அதிகாரி திவாரி பிடிபட்டார். தற்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி சரவணன் தலைமையில் கடந்த 12 மணி நேரமாக திண்டுக்கல் இ.பி காலனியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து திவாரியிடம் விசாரணை நடைபெற்ற வருகிறது. அதேநேரம் மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அங்கித் திவாரியின் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

 

 

Next Story

அரசுப் பேருந்தை வழிமறித்து நடத்துநரைத் தாக்கிய மாணவர்கள்!

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

nn


                                                    கோப்புப்படம் 
 

கடந்த 13 வருடங்களாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சிவகாசி கிளையில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார் சுரேஷ். விருதுநகரில் இருந்து சிவகாசிக்கு சென்ற அரசுப் பேருந்தை ஓட்டுநர் கனிமுத்து இயக்க, நடத்துநராக சுரேஷ் இருந்துள்ளார். அந்தப் பேருந்தில் பயணித்த ஐடிஐ மாணவர்களான மதன்குமாரும் வசந்தும் விசிலடித்து தகாத வார்த்தைகள் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அவ்விருவரும் மதுபோதையில் இருந்ததால், சிவகாசி சாலையில் உள்ள பஜார் காவல் நிலையத்தில் புகார் கூறி, அங்கேயே இறக்கி விட்டுள்ளார் நடத்துநர் சுரேஷ்.

 

அப்பேருந்து சிவகாசி சென்றுவிட்டு மீண்டும் அதே வழித்தடத்தில் திரும்பியபோது, பி.குமாரலிங்கபுரம் பேருந்து நிறுத்தத்தின் அருகே, 17 வயது சிறுவனான மதன்குமாரும் வசந்தும் டூ வீலரில் வழிமறித்து நிறுத்தியதோடு, பேருந்துக்குள் ஏறி நடத்துநர் சுரேஷை தாக்கியிருக்கின்றனர். காயமடைந்த சுரேஷ், தன்னைப் பணி செய்யவிடாமல் வழிமறித்து பேருந்துக்குள் ஏறி தாக்கிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆமத்தூர் காவல்நிலையத்தில் புகாரளிக்க, வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.