Skip to main content

கஞ்சாவுக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்... கீரமங்கலத்தில் போராட்டம் நடத்த பெற்றோர்கள் முடிவு!

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

School students addicted to cannabis ... Parents decide to hold a struggle

 

தமிழகம் முழுவதும் மதுபோதையை கடந்து மாற்றுப் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள். சமீப காலமாக கஞ்சா போதைக்கு மாணவர்கள் அதிகமாக அடிமையாகிவிட்டனர். இதனால் தினந்தோறும் விபத்துகள், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், திருட்டு, வழிப்பறி என பல சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 'பள்ளிச் சிறுவர்களை சீரழிக்கும் கஞ்சா போதை!' என்ற தலைப்பில் நக்கீரன் இதழில் செய்தி வெளியான நிலையில் சில மாணவர்கள் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியானார்கள். சில மாதங்களுக்கு முன்பு வரை ஊருக்கு ஒரு மாணவன், இளைஞன் அடிமையானதிலிருந்து தற்போது புரையோடி கிராமத்திற்கு 10 வீதம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிக திறனும், விலையும் கொண்ட பைக்களை திருடி வந்து ஓட்டுவதும் சில மாதங்களில் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பது வழக்கமாகிவிட்டது.

 

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கீரமங்கலம் மெய்நின்றநாதர் சுவாமி கோயிலில் நக்கீரர் சிலை அருகே ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் பேசும்போது, கஞ்சா வியாபாரமும், புகைக்கும் பழக்கமும் பள்ளி மாணவர்களிடையே அதிகமாகப் பரவிவிட்டது. இதனை பல பெற்றோர்கள் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். அந்த மாணவர்களை மீட்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களிடம் மற்ற மாணவர்கள் சிக்காமல் இருக்கவும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மேலும் யார் கஞ்சா விற்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுக்கும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும். அதேபோல கஞ்சா பழக்கத்தில் உள்ள சிறுவர்களை பைக் போன்ற வாகனங்களைத் திருடி வரச் செய்து அதனை வாங்கி விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே புரையோடிப் போன கஞ்சா பழக்கத்திலிருந்து மாணவர்களை காப்பாற்ற முடியும் இல்லை என்றால் இவர்களின் இழக்கு மாணவிகள் பக்கம் திரும்பவும் வாய்ப்புள்ளது என்றனர்.

 

இறுதியில் மாணவர்களை கஞ்சா போதையிலிருந்து மீட்கக்கோரி பெற்றோர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஜூலை 5 ந் தேதி கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே நடத்துவது என்று முடிவானது.போலீசாருக்கு அடையாளம் தெரிந்த கஞ்சா விற்பனை செய்யும் மாணவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் மூலம் தேவையான ஆலோசனைகள் வழங்கி நல்வழிப்படுத்த வேண்டும். இல்லை என்றால் அடுத்த தலைமுறை கஞ்சாவின் அடிமை தலைமுறையாக மாறும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.