Skip to main content

“இனி யாராலும் என்னை எழுப்ப முடியாது” மாணவியின் விபரீத முடிவு

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

School student passes away in puthukottai

 

தமிழ்நாட்டில் பள்ளி மாணவ, மாணவிகளின் மனநிலை அவசர முடிவுகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே வாரத்தில் ஒரு மாணவனும், ஒரு மாணவியும் அடுத்தடுத்து சில நாட்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவங்கள் பெற்றோர்களை கலங்கச் செய்து வருகிறது.

 

இந்த வார தொடக்கத்தில் புதுக்கோட்டை முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர் மாதேஸ்வரனிடம் தலை முடியை வெட்டி வரச்சொன்னதால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இந்த பரபரப்பு முடிவதற்குள் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயில் காவல் சரகத்தில் ஒரு கிராமத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி காலாண்டுத் தேர்வில் கணக்குப் பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால் அம்மாவும், அண்ணனும் திட்டுவார்கள் என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மாணவியின் அப்பா சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட, குடும்ப சுமை அம்மா மற்றும் 17 வயது அண்ணன் ஆகியோரிடம் இறக்கி வைக்கப்படுகிறது. குடும்ப வறுமை காரணமாக தன் படிப்பை நிறுத்திவிட்டு தங்கை படிக்க வேண்டும் என்பதற்காக அண்ணன் ஒரு சிகை அலங்கார கடையில் வேலைக்கு செல்கிறார். அந்த வருமானத்தில் தான் குடும்பமே பசியாற வேண்டும். தங்கைக்கான படிப்பு உள்ளிட்ட செலவுகளும் அதில்தான் பார்க்க வேண்டும். 

 

இப்படியான குடும்பத்தில் பிறந்த மாணவி, தாய் வீட்டில் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்குள் சென்று பார்த்த வயதான தாத்தா அதிர்ச்சியடைந்து கதற அக்கம் பக்கத்தினர் வந்து மாணவியின் சடலத்தை இறக்க ஆவுடையார்கோயில் போலீசார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

School student passes away in puthukottai

 

மாணவி தூக்கில் தொங்கிய இடத்தில் இருந்த கடிதத்தில், “அன்புள்ள அம்மாவுக்கும் அண்ணனுக்கும், நான் படிக்க லாயக்கில்லை என்று சொல்லுவிங்க, ரெண்டு பேரும் திட்டுவிங்க. ஆனாலும் நான் பரிட்சை நல்லா எழுதலன்னு நீங்க (அண்ணா) அம்மா சொல்லிச்சு. 'நீங்க அம்மாகிட்ட சொன்னிங்களாம்ல அவ தூங்கினாலும் தண்ணிய ஊத்தி எழுப்புவேன்’ என்று, ஆனால் என்னை யாராலும் எழுப்ப முடியாது. அம்மாவ பத்திரமா பாத்துக்க, அதுவுடன் சண்டைப் போடாத. எப்படியும் நான் கணக்குல பாசாகலனு திட்டுவிங்க. அதனால தான் இப்படி ஒரு முடிவு எடுக்குறேன். என்னைய எதுவும் சொல்லாதிங்க. அதனாலதான் அப்பாகிட்ட போகிறேன். அம்மா, அண்ணா உங்களை விட்டு பிரிய எனக்கு மனசு இல்லை. அம்மா - அண்ணா ஐ லவ் யூ..” இப்படித்தான் அந்தக் கடிதம் முடிகிறது. கடிதத்தை படித்து முடிப்பதற்குள் அத்தனை பேருக்கும் கண்ணீர் வந்துவிடுகிறது.

 

மாணவ, மாணவிகளின் இது போன்ற செயல்களில் இருந்து மாற்ற உடனே ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் கலந்தாய்வுகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த குடுமி பிடி சண்டை; காவல் நிலையம் முன்பு  பரபரப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

nn

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரைச் சேர்ந்தவர் வாலிபர் ஒருவர். இவர் நகரின் மையப் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, பெற்றோர், தம்பி ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் வாலிபருக்கும் அவரது நண்பனின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது, நாளடைவில் முறையற்ற தொடர்பாக மாறியதால் வாலிபர் வீட்டை விட்டு வெளியேறி நண்பனின் மனைவியுடன் வேறு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இரண்டு பேரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் வாலிபரின் தந்தை திடீரென உயிரிழந்து விட்டார். தந்தையின் இறுதிச்சடங்குகள் செய்ய வாலிபர் தனது வீட்டிற்கு சென்றார். இறுதி சடங்குகள் முடிந்ததும் வாலிபரின் மனைவி, கணவரை முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணின் வீட்டுக்கு மீண்டும் செல்லவிடாமல் தடுத்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

 

கடந்த ஒரு வார காலமாக வாலிபருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண் அவரை பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை,  அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பெண் வாலிபரை பல இடங்களில் தேடினார். அப்போது அவர் தனது முதல் மனைவியுடன் வேறு ஒரு இடத்தில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற அப்பெண் வாலிபர் வசித்து வரும் வாடகை வீட்டின் கண்ணாடிகளை கல் வீசி தாக்கியதோடு அங்கேயே கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து புகார் அளிப்பதற்காக சம்பந்தப்பட்ட செல்போன் கடை வாலிபர் தனது முதல் மனைவியுடன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு வாலிபர் புகார் அளிக்க வந்திருப்பது குறித்து தெரிந்தது, உடனே அவர் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தார். அப்போது அங்கு வந்து இருந்த  வாலிபரை பிடித்த அந்தப்பெண் 'என்னுடன் வாழு வா' என சட்டையை பிடித்து இழுத்தார். அவர் வர மறுத்ததால் அவரை தாக்கினார்.

 

இதை பார்த்து கோபமான வாலிபரின் மனைவி, 'என் கணவரையா அடிக்கற' என கணவரின் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணை தாக்கினார். இது நகர காவல் நிலையம் முன்பாக  நடைபெற்றது. இரண்டு  பெண்களும் காவல் நிலையம் முன்பாக கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியான போலீசார், அவர்களை சமாதானம் செய்ய வந்து அடித்துக்கொண்ட இருவரையும் விலக்கி விட்டனர். அவர்கள்  போலீசாரையும் தள்ளிவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

 

இதனை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசாரும், அங்கேயே உள்ள அனைத்து மகளிர் பெண் போலீசாரும் ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பெண் விவசாயியை வெட்டிய வடமாநில இளைஞர்; வெளுத்து வாங்கிய கிராம மக்கள்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

North State Youth attack Female Farmer; Bleached villagers

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று வழக்கம்போல் தனது விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார். அப்போது, அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மனையை கொண்டு திடீரென மகாலட்சுமியின் கையில் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. 

 

இதனை தொடர்ந்து, மகாலட்சுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அந்த ஊர் பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த வடமாநில இளைஞர் அங்கிருந்து தப்பிச்  சென்று அருகில் உள்ள ஒரு வீட்டின் மாடி பகுதியில் ஒளிந்துகொண்டார். இதனையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரை பிடிப்பதற்காக அருகில் சென்ற போது அரிவாள்மனையால் தாக்க முயன்றார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிடிக்க முடியாமல் அந்த இளைஞரிடம், ஹிந்தி மொழி தெரிந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர், இளைஞர் அருகில் சென்று நைசாக பேச்சு கொடுத்து கூல்டிரிங்க்ஸ் கொடுத்து சமாதானப்படுத்தினார். மேலும், இளைஞர் தனது கையில் வைத்திருந்த ஆயுதத்தை சாதுர்யமாக வாங்கி அப்புறப்படுத்தினார்.

 

இதையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்து சரிமாரியாக தாக்கினர். இதில், அந்த இளைஞருக்கு ரத்த காயம் ஏற்பட்டதை அடுத்து ஆட்டோவில் ஏற்றி, அவரை அழைத்து சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, பொதுமக்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டதில் அந்த இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயம் பார்த்து வந்த பெண்மணியை வடமாநில இளைஞர் ஒருவர் அரிவாள்மனையால் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்