Skip to main content

பள்ளி மாணவர் தற்கொலை விவகாரம்; ஆட்சியரை சந்தித்த ஆசிரியர்கள்

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

School student incident Teachers who met the Collector

 

புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி +2 மாணவர் மாதேஷ்வரன் திங்கள் கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மாணவரின் உறவினர்களின் போராட்டத்தையடுத்து பள்ளித் தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி மாணவர்களிடம் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கச் சொன்ன தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளதை ஏற்க முடியாது என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் வெளியாகும் நிலையில், தலைமை ஆசிரியர் மீதான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் தங்கமணி தலைமையில், ஏராளமான மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, புதுக்கோட்டை அரசு முன்மாதிரிப் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கும் பள்ளித் தலைமை ஆசிரியருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி பள்ளி நலன் கருதி மாணவர்களின் ஒழுங்கு கட்டுப்பாட்டை நெறிப்படுத்தும் நோக்கில் சிகை அலங்காரத்தை சரி செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர் எதிர்மறையாக எடுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

School student incident Teachers who met the Collector

 

மேலும் தற்கொலை சம்பவம் பள்ளிக்கு வெளியே நடந்துள்ளது. இதற்குத் தலைமை ஆசிரியரோ, ஆசிரியர்களோ கூறிய அறிவுரைக்கும் தொடர்பில்லாத நிலையில், தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்திருப்பது வருந்தத்தக்கது. தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கத்தால் மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளில் மாணவர்களின் ஒழுக்கத்தில் பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். எனவே எதிர்கால சமுதாய நலன் கருதி, வளமான சமுதாயம் அமைந்திடத் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதேபோல அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பும் ஒருங்கிணைந்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரி போராட்டங்கள் நடத்தவும் முடிவெடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டு வேலைக்குச் சென்ற போது பாலியல் தொல்லை; மதபோதகர் அடித்துக் கொலை

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
misbehaviour while working at home; The priest was lost his lives

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி என்கிற டேனியல் (62). இவர் புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். மேலும், இவர் மண்டையூர், மாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் மாலை நேரத்தில் சென்று கிறிஸ்துவ பாடல்களை பாடி மத போதனையில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்று (07-12-23) காலை 6 மணியளவில் டேனியல் வீட்டின் வாசலில் ஒரு பெண் அழுதபடி அமர்ந்திருந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண், மதபோதகர் டேனியலை தான் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் மண்டையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், கொலை செய்யப்பட்டு கிடந்த டேனியலின் உடலை கைப்பற்றி அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், டேனியலுக்கும் அந்த பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது, டேனியல் தான் தனியாக இருப்பதாகவும், தனக்கு சமையல் மற்றும் வீட்டு வேலை செய்வதற்கு ஆள் தேவை என்றும் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த அந்த பெண், டேனியல் வீட்டிற்கு சென்று தங்கி அங்கு வேலை பார்த்து வந்துள்ளார்.

இதற்கிடையே, டேனியல் அந்த பெண்ணுக்கு தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே போல், நேற்று முன் தினம் (06-12-23) இரவும் டேனியல், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், டேனியல் மீது வெறுப்பு ஏற்பட்டு அவரை அந்த பெண் கீழே தள்ளியதில் மயக்கம் அடைந்துள்ளார். அப்போது அவரது வீட்டில் மோட்டார் சைக்கிளில் இருந்து கழற்றி வைக்கப்பட்ட பகுதியால் முகம் மற்றும் தலையில் அடித்ததில் டேனியல் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இறந்து கிடந்த டேனியல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்து கீரனூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். 

Next Story

21 தமிழக மீனவர்கள் கைது; தொடரும் அட்டூழியம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

21 Tamil Nadu fishermen arrested; Continued atrocities

 

மிக்ஜாம் புயல் காரணமாக பல நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில், நேற்று கடலுக்கு சென்ற மீனவர்கள் 21 பேர் இன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த மாதம் 27 ஆம் தேதியிலிருந்து புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்தனர். புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து, நேற்று மீன் பிடிக்கச் சென்றனர்.

 

நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை மன்னார் - கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 17 பேரைக் கைது செய்திருந்தனர். இந்நிலையில் இன்று தற்போது ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த மொத்தம் 21 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்த 21 மீனவர்களில் 13 பேர் புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள், 8 பேர் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும் யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.