Skip to main content

கிள்ளி விட்ட சசிகலா... குழப்பத்தில் எடப்பாடி... மௌனத்தில் ஓபிஎஸ்...

Published on 28/02/2021 | Edited on 28/02/2021

 

Sasikala Politics...  Edappadi in confusion ... OPS in silence ...

 

தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதிகள் தாமதமாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் நினைத்திருந்த நிலையில் தேர்தல் தேதி முன்னராகவே அறிவிக்கப்பட்டதால் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத்தாக்கல் போன்ற விஷயங்களில் மும்மரமாக அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன. அதேபோல் தேர்தல் நடைமுறைகளுக்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த சரத்குமார் சசிகலாவை சந்தித்த பிறகு ஐ.ஜே.கே உடன் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளார். சசிகலாவை சரத்குமார் சந்தித்த பிறகு இது நடந்துள்ளதால் அவசர அவசரமாக எடப்பாடி தீவிர பேச்சுவார்த்தை நடத்தி, பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாமகவிற்கு 23 இடங்கள்  ஒதுக்கப்பட்டு, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 

Sasikala Politics...  Edappadi in confusion ... OPS in silence ...

 

இதேபோல பாஜகவிடமும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. பாஜக தங்களுக்கு 60 தொகுதிகள் வேண்டும் எனக் கூறியதோடு, தொகுதி பங்கீடு குறித்து அமித்ஷாவிடம் நீங்கள் பேச வேண்டும் என பாஜக மாநில தலைமை அதிமுக தலைமையிடம் கூறியதால் அதிமுகவும் அமித்ஷாவுடன் பேச தயாராகி வருகிறது. இதற்கிடையில் அதிமுக எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே ஜெயித்த அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மட்டுமல்லாமல் 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக எம்எல்ஏ வேட்பாளர்களும் மீண்டும் வாய்ப்பு கேட்கிறார்கள். ஆகையால் பாஜகவிற்கு  பாமகவிற்கு கொடுக்கப்பட்ட 23 தொகுதிகளை விட குறைவாகவே கொடுக்க வேண்டும் அதிகமாக கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தீர்கள் என்றால் அதிமுக நிற்கக்கூடிய தொகுதிகள் குறையும். அதேபோல் அதிமுகவிற்கு அதிகமாக செல்வாக்கு உள்ள தொகுதிகளையும் பாஜகவிற்கு ஒதுக்கக் கூடாது. இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். ஆகையால் பாஜகவிற்கு அதிக இடங்கள் ஒதுக்க கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.

 

Sasikala Politics...  Edappadi in confusion ... OPS in silence ...

 

இதற்கிடையில் அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஒருசிலர், அதிமுக வெற்றி அடையக்கூடிய செல்வாக்குமிக்க தொகுதிகளை பாஜகவிற்கு கொடுத்தாலோ அல்லது நல்ல வெற்றிவாய்ப்புள்ள அதிமுக நபர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலோ சசிகலா பக்கம் சென்று விடுவோம் என்று ஓபனாகவே எடப்பாடியிடம் சொல்லியுள்ளனர். இதனால் எடப்பாடி குழப்பத்தில் இருக்கிறார். இவ்வளவு நாட்கள்  பணிவாக பேசினார்கள் ஆனால் இப்பொழுது மாறி பேசுகிறார்களே என்ற குழப்பத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். இதுகுறித்து அவர் விசாரிக்கையில், நேற்று இருந்த நிலவரம் வேறு. நேற்று முதல்வர் என்ற பதவியில் இருந்தீர்கள். அப்ப இருந்த நிலவரம் வேற ஆனால் இன்று தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது. இப்பொழுது உள்ள நிலவரம் வேற. அவரவர்கள் தங்களுடைய பதவியை தக்கவைக்க தான் பார்ப்பார்கள். அதனால் தான் அப்படி பேசுகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் நம்மை எதிர்க்கவும் தயாராக இருப்பார்கள். அவர்களது கோரிக்கையில் நியாயம் இருக்கிறது என்று எடப்பாடியிடம் கூறியுள்ளனர் என தெரிவிக்கின்றனர் அதிமுகவினர்.

 

அதேபோல் சசிகலாவும், தனக்கு வேண்டிய அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களிடம் அங்கேயே இருந்து சீட்டு பெறுவதற்கான வாய்ப்பினை பாருங்கள். அவர்கள் சீட்டுக் கொடுக்கவில்லை என்றால் அதற்கடுத்த நடவடிக்கைகளை பார்த்துக் கொள்ளலாம் எனவும் கூறியிருக்கிறாராம்.

 

இதை எல்லாவற்றையும் அறிந்த ஓ.பன்னீர்செல்வம் மௌனமாகவே இருக்கிறார் என அதிமுக மேல்மட்ட நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.