Skip to main content

கிள்ளி விட்ட சசிகலா... குழப்பத்தில் எடப்பாடி... மௌனத்தில் ஓபிஎஸ்...

Published on 28/02/2021 | Edited on 28/02/2021

 

Sasikala Politics...  Edappadi in confusion ... OPS in silence ...

 

தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதிகள் தாமதமாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் நினைத்திருந்த நிலையில் தேர்தல் தேதி முன்னராகவே அறிவிக்கப்பட்டதால் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத்தாக்கல் போன்ற விஷயங்களில் மும்மரமாக அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன. அதேபோல் தேர்தல் நடைமுறைகளுக்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த சரத்குமார் சசிகலாவை சந்தித்த பிறகு ஐ.ஜே.கே உடன் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளார். சசிகலாவை சரத்குமார் சந்தித்த பிறகு இது நடந்துள்ளதால் அவசர அவசரமாக எடப்பாடி தீவிர பேச்சுவார்த்தை நடத்தி, பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாமகவிற்கு 23 இடங்கள்  ஒதுக்கப்பட்டு, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 

Sasikala Politics...  Edappadi in confusion ... OPS in silence ...

 

இதேபோல பாஜகவிடமும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. பாஜக தங்களுக்கு 60 தொகுதிகள் வேண்டும் எனக் கூறியதோடு, தொகுதி பங்கீடு குறித்து அமித்ஷாவிடம் நீங்கள் பேச வேண்டும் என பாஜக மாநில தலைமை அதிமுக தலைமையிடம் கூறியதால் அதிமுகவும் அமித்ஷாவுடன் பேச தயாராகி வருகிறது. இதற்கிடையில் அதிமுக எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே ஜெயித்த அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மட்டுமல்லாமல் 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக எம்எல்ஏ வேட்பாளர்களும் மீண்டும் வாய்ப்பு கேட்கிறார்கள். ஆகையால் பாஜகவிற்கு  பாமகவிற்கு கொடுக்கப்பட்ட 23 தொகுதிகளை விட குறைவாகவே கொடுக்க வேண்டும் அதிகமாக கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தீர்கள் என்றால் அதிமுக நிற்கக்கூடிய தொகுதிகள் குறையும். அதேபோல் அதிமுகவிற்கு அதிகமாக செல்வாக்கு உள்ள தொகுதிகளையும் பாஜகவிற்கு ஒதுக்கக் கூடாது. இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். ஆகையால் பாஜகவிற்கு அதிக இடங்கள் ஒதுக்க கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.

 

Sasikala Politics...  Edappadi in confusion ... OPS in silence ...

 

இதற்கிடையில் அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஒருசிலர், அதிமுக வெற்றி அடையக்கூடிய செல்வாக்குமிக்க தொகுதிகளை பாஜகவிற்கு கொடுத்தாலோ அல்லது நல்ல வெற்றிவாய்ப்புள்ள அதிமுக நபர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலோ சசிகலா பக்கம் சென்று விடுவோம் என்று ஓபனாகவே எடப்பாடியிடம் சொல்லியுள்ளனர். இதனால் எடப்பாடி குழப்பத்தில் இருக்கிறார். இவ்வளவு நாட்கள்  பணிவாக பேசினார்கள் ஆனால் இப்பொழுது மாறி பேசுகிறார்களே என்ற குழப்பத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். இதுகுறித்து அவர் விசாரிக்கையில், நேற்று இருந்த நிலவரம் வேறு. நேற்று முதல்வர் என்ற பதவியில் இருந்தீர்கள். அப்ப இருந்த நிலவரம் வேற ஆனால் இன்று தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது. இப்பொழுது உள்ள நிலவரம் வேற. அவரவர்கள் தங்களுடைய பதவியை தக்கவைக்க தான் பார்ப்பார்கள். அதனால் தான் அப்படி பேசுகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் நம்மை எதிர்க்கவும் தயாராக இருப்பார்கள். அவர்களது கோரிக்கையில் நியாயம் இருக்கிறது என்று எடப்பாடியிடம் கூறியுள்ளனர் என தெரிவிக்கின்றனர் அதிமுகவினர்.

 

அதேபோல் சசிகலாவும், தனக்கு வேண்டிய அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களிடம் அங்கேயே இருந்து சீட்டு பெறுவதற்கான வாய்ப்பினை பாருங்கள். அவர்கள் சீட்டுக் கொடுக்கவில்லை என்றால் அதற்கடுத்த நடவடிக்கைகளை பார்த்துக் கொள்ளலாம் எனவும் கூறியிருக்கிறாராம்.

 

இதை எல்லாவற்றையும் அறிந்த ஓ.பன்னீர்செல்வம் மௌனமாகவே இருக்கிறார் என அதிமுக மேல்மட்ட நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.