Skip to main content

கொள்ளை லாபத்தில் சானிடைசர் மற்றும் முகக் கவசம் விலைகள் ..? போலிகள் நடமாட்டம் ..?

Published on 25/03/2020 | Edited on 26/03/2020

கரோனா தாக்குதலுக்கு உலகநாடுகளே கலக்கத்தில் உள்ளநிலையில், அதிலிருந்து தன் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், நோய் தாக்கத்தை முற்றிலும் ஒழிக்க பல முயற்சிகளையும் எடுத்து வரும் நிலையில், கரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்கள் தங்கள் கைகளை சானிடைசர்களை பயன்படுத்தி கைகளைச் சுத்தம் செய்யவும், காற்றில் பரவுவதைத் தடுக்கும் வகையில் முகக் கவசம் அணியவும் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, முகக்கவசங்களையும், சானிடைசர்களையும் வாங்க மருந்தகங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர், இதைச் சந்தர்பமாக பயன்படுத்திக்கொண்டு சில வியாபாரிகள் அறுபது ரூபாய் முதல் என்பது ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த 200 மி.லி சானிடைசர், தற்போது முன்னூறு முதல் ஐநூறு ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் பல மருந்தகங்களில் ஸ்டாக்கில்லை என்கிறார்கள். மேலும் முகக் கவசம் டூ பிலே மூன்று ரூபாயும், த்ரீ பிலே ஐந்து ரூபாய் வரை இருந்தது கரோனா தாக்கத்தால் தற்போது இருபத்தைந்து ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

 Sanitizer and face shield prices in robbery ..?


இது தொடர்பாக நம்மிடம் பேசிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தீனன், ஒரு முகக் கவசத்தின் விலை இருபத்தைந்து ரூபாய் முதல் நாற்பது ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது, அதேபோல சானிடைசரின் விலையோ 200 மி.லி ஐநூறு ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கிறார்கள். பில் கேட்டால் நோ ஸ்டாக்  இல்லை என்று தெரிவிக்கின்றனர், அதேபோல பல மருந்துகடைகளில் இந்த இரண்டு பொருட்களையுமே பதுக்கிதான் வைத்துள்ளனர். மேலும் இதற்கு பில் கிடையாது. எம்.ஆர்.பி  ரேட்டும் அழித்துவிட்டே விற்பனை செய்கின்றனர்.

இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மத்தியரசால் தனிமை படுத்தப்பட்ட மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதன் விலை மேலும் அதிகரிக்கும், அரசு நிர்ணயம் செய்துள்ள சானிடைசரின் விலை 200 மி.லி அதிகபட்சம் 100 க்கும், முகக்கவசம் டூபிலே எட்டு ரூபாய்க்கும், த்ரி பிலே பத்து ரூபாய்க்கும் விற்பனை செய்ய கடுமையான கட்டுப்பாடு போட வேண்டும். இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!

இவரைத் தொடர்ந்து சானிடைசர் மற்றும் முகக்கவசம் சப்ளையர் ஆன ஹரீஷ்ராகவனிடம் பேசினோம், முகக்கவசம் தற்போது, அதிகப்படியான தேவைகளால், அதிக விலைக்கு போலி முகக்கவசமும் ,விற்பனை செய்யப்படுகின்து, அதில் தமிழகம் முழுவதும் நடந்த சோதனையில் தரமற்ற போலி முகக்கவசம் மற்றும் எம்.ஆர்.பி விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ததாக,  பிரபல மருந்தகம் ஆன அப்போலோ பார்மஸி உட்பட நாற்பது கடைகளுக்கு சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 Sanitizer and face shield prices in robbery ..?


முகக்கவசம் தயாரிக்க முறையான பதினோரு சான்றுகளைப் பெற்று இருக்க வேண்டும், மருத்துவ உபகரணம் என்பதால் கைப்படாமல் தயாரிக்க வேண்டும், தற்போது தேவை அதிகமுள்ளதால் குடிசை தொழில் போல முகக்கவசம் தயாரிப்பது தவறு, முறையாக தான் தயாரிக்க வேண்டும். அதில் முக்கியமானது பி.எஸ்.இ (பாக்டீரியல் பில்டரேஷ்சன் எபிஸ்சியென்சி) என்ற சோதனை சான்று பெற்றி இருக்க வேண்டும், அதில் பரிசோதித்த பின் 95% தரமுள்ள முகக்கவசம் மட்டுமே விற்பனைக்கு அனுப்படும். இதில் இரண்டு வகை முகக்கவசம் தற்போது பயன்படுத்துகிறோம். அதில் டூப்ளே முகக்கவசம் ( ஸ்பன் பவுண்டு பாலி புரோபிலீன்) மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த மூலப்பொருள் பெரும்பான்மையாக சீனாவில் இருந்தே இறக்குமதி ஆவதால் தற்போது அந்த நாடு தடை செய்துள்ளது. 

த்ரி பிலே முகக்கவசத்தின் நடுவில் பாலி புரோபிலீன் கொண்டு தயாரிக்க வேண்டும், அதேபோல இதன் விலை கடந்த ஜனவரி 24ல் குஜராத்தில் நடந்த எக்ஸ் போவில் ரூ.2:50 பைசாவாக இருந்தது தற்போது 15 ரூபாய் வரை தயாரிப்பு செலவே வந்துவிட்டது. மார்கெட்டில் 35 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் அரசு சமீபத்தில் அதிகபட்சம் பத்து ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் இதன் விலை அதிகரித்தே விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சம் ஒரு முகக்கவசத்தை இரண்டு மூன்று முறை மட்டுமே பயன்பபடுத்த வேண்டும். அதேபோல சானிடைசர் என்ற பெயரில் டெர்பன்டாயில் பயன்படுத்தி போலிகள் தயாரிக்கப்படுகிறது. அதையும் அரசு கட்டுப்படுத்த வேண்டும், இதைப் பயன்படுத்தி  சட்டவிரோத பண பரிவர்தனைகளும் நடைபெறுகின்றது வருத்தமான விஷயம் என்றார்.

 

 Sanitizer and face shield prices in robbery ..?

 

இவரைத் தொடர்ந்து சமூக ஆய்வாளர் ஆன தேவேந்திரன், எல்லாம் சரி அன்றாடங் காய்ச்சிகளை அரசு சற்று உற்று நோக்க வேண்டும், சுகாதாரத்துறை மட்டுமல் மற்ற துறையும் அரசுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும், சானிடைசர் விலை முந்நூறு முதல் ஐநூறு, அறுநூறு விக்கிறாங்க, ஒரு முகக்கவசம் பத்து முதல் முப்பது ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. அதில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முகக்கவசம் பயன்படுத்த வேண்டிய நிலையில் பணத்திற்கு எங்கே போவார்கள்..? ஆகவே டில்லியில் குறிப்பிட்டுள்ளது போலவே, ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்ய அரசு உடனடியாக ஏற்பாடுகளைச் செய்தால் மாட்டுமே சாமானியனைக் காப்பாற்ற முடியும் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.