Skip to main content

ஒரத்தநாட்டில் மணல் லாரி பறிமுதல்..உரிமையாளரை அனுப்பி வைக்க உத்தரவு.

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தண்ணீர்பஞ்சம் ஏற்பட்டாலும் அதற்கு காரணமான மணல் கடத்தலை கடத்தல்காரர்களும் நிறுத்தவில்லை தடுக்க வேண்டிய அதிகாரிகளும் தடுக்கவில்லை. மணல் கடத்தல் நடப்பதாக புகார் கொடுத்தால் புகார் கொடுத்தவர்களை மிரட்டும் சம்பவங்கள் தான் அதிகமாக நடக்கிறது. அதிகாரிகளிடம் கொடுக்கும் மனு மணல் கடத்தல்காரர்களுக்கு உடனே தகவல் கொடுக்கிறார்கள் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள்.
 

sand robbery


இப்படி ஒரு சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது. இலுப்பூர் தாலுகா பரம்பூர் அருகில் உள்ள காரசூராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்ற இளைஞர் அப்பகுதி வெள்ளாற்றில் அதிகாரிகள் துணையோடு மணல் கடத்தல் நடக்கிறது பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனால் நடவடிக்கை எடுங்கள் என்று நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். 

ஆனால் இன்று அதே சரவணன் என் உயிருக்கு ஆபத்து என்று அவசர மனு அனுப்பியுள்ளார் மணல் கடத்தல் சம்மந்தமாக மனு கொடுத்ததால் கடத்தல்காரர்கள் என்னை மிரட்டுகிறார்கள். என் உயிருக்கும் ஆபத்தாகலாம், அதற்கு கடத்தல்காரர்களுடன் தொடர்பில் உள்ள அதிகாரிகளே காரணம் என்று அனுப்பியுள்ளார். இப்படி மணல் திருட்டால் தண்ணீர் இல்லாமல் போனாலும் தடுக்க நினைத்தால் கொல்ல நினைக்கிறார்கள்.

ஆனால் புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட எல்லையில் ஒரத்தநாடு தொகுதியில் புதுக்கோட்டை மாவட்ட மணல் கொள்ளையர்கள் வரிசைகட்டி மணலை திருடி ஆற்றை பாலைவனமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கொள்ளையர்களுக்கு பின்னால் ஆளுங்கட்சி மாண்புமிகுக்களும் உள்ளனர். அதனால் கடத்தல் லாரிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து கொடுத்துள்ளனர்.


15 ஆம் தேதி ஒரத்தநாடு பகுதியில் மணல் கடத்திச் சென்ற ஒரு லாரியை போலீசார் பிடித்து ஓட்டுநரை கைது செய்து லாரி ஓனரான கறம்பக்குடி அருகில் உள்ள மானயவயலைச் சேர்ந்தவரையும் காவல் உக்கார வைத்துவிட்டனர். மானியவயல்காரர் அவருக்கு வேண்டிய அரசியல் பிரமுகரிடம் பேச அவர் மாவட்ட அளவில் உள்ள சீருடை அதிகாரியிடம் பேசி சில நிமிடங்களில் காவல் நிலையத்திற்கு காவல் உயர் அதிகாரியிடம் இருந்து அழைப்பு வந்தது.

மணல் கொள்ளையை தடுக்க வேண்டியவர்களே இப்படி துணை போனால் தமிழ்நாட்ல தண்ணீர் பஞ்சம் வராமல் இருக்குமா? இது தெரிஞ்தோ தெரியாமலோ லட்சம் லட்சமாக வாங்குகிற சம்பளத்தையும் வெளிநாட்டு வேலைகளையும்  கூட உதறி தள்ளிவிட்டு உள்ளூரில் குளம் வெட்டுகிறார்கள் நம் இளைஞர்கள். மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகளுக்கும் மனசாட்சி இருந்தா சரி தான்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆணவக் கொலை! - பெண்ணின் தந்தை கைது

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
tanjore girl passes away case father arrested by police

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (19). இவரும், பூவாளூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (19) என்பவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருப்பூர் மாவட்டம் அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். 

இந்த நிலையில், இவர்களது காதல் ஐஸ்வர்யாவின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. மேலும், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஐஸ்வர்யாவின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யாவுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையோடு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர். 

இதையடுத்து, இவர்கள் திருமணம் செய்தது ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி பல்லடம் காவல்துறையினர், ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கடந்த 3 ஆம் தேதி நவீனை தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள், ‘ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டனர்’ என்று கூறியுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த நவீன், ஒரத்தநாடு பகுதிக்குச் சென்றுள்ளார். மேலும், அவர் இந்த சம்பவம் குறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் பகுதிகளுக்குச் சென்று காவல்துறையினர் கடந்த 8ம் தேதி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துள்ளதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு காவல்துறையினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அங்கு உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கூட இல்லாததை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது சகோதரி விளம்பரசி, மற்றொரு சகோதரி இந்து ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் அவரது மனைவி ரோஜா இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். 

Next Story

மனைவியை வெட்டிவிட்டு தப்பியவர் விபத்தில் பலி 

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
person passes away in accident near tanjore

தஞ்சையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மனைவி உள்ளிட்ட மூன்று பேரை அரிவாளால் வெட்டி விட்டு காரில் தப்பிய கணவன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா நகரை சேர்ந்தவர் நித்தியா. ஐ.ஓ.பி. மண்டல மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சுந்தர் கணேஷ். வங்கி ஒன்றில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனையின் காரணமாக அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இரண்டு மாதமாக வேலைக்கு செல்லாமல் சுந்தர் கணேஷ் வீட்டிலேயே இருந்துள்ளார். 

இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த தனது மனைவி நித்யாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு வெளியே நிறுத்தி வைத்திருந்த தனது காரில் வெட்டிய அரிவாளுடன் தப்பி சென்றார். பிறகு யாகப்பா நகர் பிரதான சாலையில் உள்ள பால் டிப்போவில் இருந்த கடை உரிமையாளர்கள் கோபி மற்றும் தாமரை ஆகிய இருவரையும் வெட்டிவிட்டு காரில் தப்பி சென்றுள்ளார். தப்பிச் செல்லும் போது தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டி அருகே சாலையை கடக்க முயன்றபோது டிப்பர் லாரி மீது பக்கவாட்டில் மோதியதில் கார் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது காரில் இருந்த அரிவாள் மற்றும் அவரது கை துண்டாக கீழே விழுந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அரிவாள் வெட்டு சம்பந்தமாகவும் விபத்தில் உயிரிழந்தது சம்பந்தமாகவும் தஞ்சை நகர தெற்கு காவல் துறை, தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் மற்றும் செங்கிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் புதிதாக ஒரு வீடு வாங்கியுள்ளனர். ஆனால், கணவரின் விருப்பம் இல்லாமல் இந்த வீட்டை வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் பால் டிப்போவில் இருந்த இருவரை ஏன் தாக்கினார் எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.