Skip to main content

மண்ணை எடுக்க அனுமதிக்க மாட்டோம்... பொக்லைனை சிறைப்பிடித்த கிராம மக்கள்!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020


 

sand peopels sivakangai district karaikudi police and officers

 

"மண்வளம் இருந்தால் தான் விவசாயம் வளம் பெற முடியும். ஆதலின் எங்களது கிராமத்திலிருந்து ஒரு பிடி மண்ணையும் எடுக்க அனுமதிக்க மாட்டோம்." எனச் சிராவயல் புதூர் கிராம மக்கள் ஒன்றிணைந்து மண் அள்ள வந்த பொக்லைன் இந்திரங்களைச் சிறைப் பிடித்துப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

 

sand peopels sivakangai district karaikudi police and officers

 

ரூ.750 கோடி மதிப்பீட்டில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து மேலூர் வரையிலான 45 கி.மீ நாற்கர சாலை அமைத்துத் தரும் பணியினை எடுத்துள்ளது ஆந்திராவினைச் சேர்ந்த ஜே.எஸ்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம். இந்தச் சாலைப்பணிக்காக அமைச்சர் ஒருவர் தலையீட்டின் பேரில் குறிப்பிட்ட அளவு கி.மீ.தூரத்திற்குக் கண்மாய் மண் நிரப்பும் ஒப்பந்தம் புதுக்கோட்டையினைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு இந்த நிறுவனத்திற்காக திருப்புத்தூர் தாலுகாவினைச் சேர்ந்த சிராவயல் புதூர் பஞ்சாயத்திலுள்ள 16 ஹெக்டேர் பரப்பளவுக் கொண்ட செட்டிக்குளம் கண்மாயில் மண் எடுக்க, நிபந்தனையின் அடிப்படையில் மண் எடுத்துக் கொள்ள ஒப்புதல் அளித்தது மாவட்ட நிர்வாகம்.

 

sand peopels sivakangai district karaikudi police and officers

 

இந்நிலையில், இன்று (02/07/2020) செட்டிக்குளம் கண்மாய்ப் பகுதிக்குச் சென்ற இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் மண் எடுக்கும் பணியைத் துவங்கியது. இந்தத் தகவல் கிராம மக்கள் முழுவதிற்கும் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எங்களது கிராமத்திலிருந்து ஒரு பிடி மண்ணையும் எடுக்க அனுமதிக்க மாட்டோம் பொக்லைன் இயந்திரங்களைச் சிறைப் பிடித்து போராடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்துறையினரும், காவல்துறையினரும் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளனர். எனினும் முடிவு எட்டப் பெறாததால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகின்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.