Skip to main content

“என்னமோ நடக்குது மர்மமா இருக்குது” 35 நாட்கள்... பூட்டிய அறையில் இந்தியாவின் தலையெழுத்து

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

தேர்தல் கமிஷன் தொடர்ச்சியாக எதிர்கட்சியினரை குறிவைத்து சோதனையிட்டுவந்தது. இந்நிலையில் தேர்தல் முடிந்தவுடன்  தமிழகத்தின் அனைத்து தரப்பினரின் “எப்படி இவர்களை நம்பி 35 நாட்கள் நாம் ஓட்டளித்த ஓட்டு பெட்டி பத்திரமாக இருக்கும் அதில் ஏதாவது கோல்மால் செய்துவிடுவார்களோ” என்ற பேச்சு அடங்குவதற்குள் வாக்களித்து இரண்டாவது நாளிலேயே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி வளாகத்தில் மதியம் 3 மணிக்கு கலால்வரி தாசில்தாரான சம்பூர்ணம் என்ற பெண் அதிகாரி தலைமையில் 4 பேர் உள் சென்று மாலை 5.30 மணிக்கு சில ஆவணங்களுடன் வெளியேவந்தனர் என குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. 

 

sampooranam

 


இந்த தகவலை அடுத்து பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மருத்துவ கல்லூரியில் கூடி தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது இன்றைகான சிசிடிவி காட்சிகள் வேண்டும் என திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன் தரப்பில் கேட்கப்பட, அதிராகரிகள் தரப்பு சிசிடிவி கேமரா செயல்படவில்லை என  கூறியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது வெளியில் உள்ள எதிர்க்கட்சி தரப்பினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு திரண்ட கட்சிக்காரர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு நேரம் ஆக ஆக திமுக கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும் அங்கு குவிய தொடங்கினர். அனைத்து கட்சி வேட்பாளர்களும் அங்கிருந்தனர் அதிமுக வேட்பாளரை தவிர இது அங்கிருந்தவர்களுக்கு சந்தேகத்தை அதிகபடுத்தியது.


சிறிது நேரத்தில் காரில் வந்து இறங்கிய நான்கு இளைஞர்கள் போலீஸாரிடம் ஏதோ சொல்ல, அவர்களை மட்டும் உள்ளேவிட முற்பட அங்கிருந்தவர்கள் அவர்களை இழுத்து யார் என்று விசாரித்தனர். அப்போது அவர்கள், தாங்கள் சி.சி.டி.வி இன்ஜினியர்கள் அமைச்சர் வீட்டிலிருந்து வருகிறோம் என்று ஒருவரும். இன்னொருவர் மெடிக்கல் காலேஜ் மாணவர்கள் என்றும் முன்னுக்கு பின் முறனாக பதில் கூறியுள்ளனர். அதனால், அங்கிருந்தவர்கள் அவர்களை அடையாள அட்டையை காண்பிக்கும்படி  கேட்டுள்ளனர். இதனால், அங்கு கைகலப்பாகி அவர்களுக்கு தர்ம அடி விழுந்துள்ளது. அதற்குள் காவல்துறை தலையிட்டு அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டுவந்தனர்.

 

sampooranam

 

உள்ளே சென்ற வேட்பாளர் சு.வெங்கடேசன் கூறுகையில், “மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பில் உள்ளது. இங்கு மதியம் பெண் அதிகாரி ஒருவர் மாவட்ட ஆட்சியரின் எந்தவித அதிகாரப்பூர்வமான அனுமதியும் இல்லாமல் அவராக உள்ளே வந்து மூன்றாவது மாடியில் உள்ள ஒரு அறைக்கு சென்று உள்ளே உள்ள ஆவணங்களை எடுத்து வெளியே உள்ள ஜெராக்ஸ் கடையில்  ஜெராக்ஸ் எடுத்துள்ளார். அவர் மூன்று மணி நேரம் உள்ளே இருந்துள்ளார். இந்த தகவல் அங்கிருக்கும் காவலர் ஒருவர் எனக்கு தகவல் தெரிவிக்கவே உடனே நான் ஆட்சியரிடம் தகவலை தெரிவித்தேன். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரிகள் வந்து இவர் அதிகாரிதான் என்று சொல்லி விட்டு  அவரை அழைத்து சென்றுவிட்டனர். ஆனால் எந்தவித அதிகாரப்பூர்வ அனுமதியும் இல்லாமல் இவர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக இங்கே இருந்திருக்கிறார். எப்படி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள இடத்தில் ஆட்சியரின் அதிகாரபூர்வமான அனுமதி இல்லாமல் உள்ளே வந்தார். உள்ளே வந்து அவர் என்ன செய்தார் என்று எங்களுக்கு தெரியவேண்டும். எங்களுக்கு சிசிடிவி காட்சி வேண்டும். எப்போது வந்தார் எப்போது சென்றார் என தெரிய வேண்டும். ஆவணங்களை ஏன் ஜெராக்ஸ் எடுக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆவணங்களை ஏன் ஜெராக்ஸ் எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வந்து நேரில் பதில் சொல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கு அவர் கட்டாயம் அந்த அதிகாரியிடம் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதி அளித்தார். எல்லாம் பயந்தது போலவே நடந்துவிட்டது இன்னும் 32 நாட்கள் எப்படி தள்ளபோகிறோம் என்று பயமாக இருக்கிறது” என கூறினார்.

 

sampooranam

 

டேவிட்அண்ணாதுரையோ முதலில் சி.சி.டி.வி காட்சிகள் அழிந்துவிட்டது என்றார். பிரச்சனை பெரிசாக காட்சிகளை போட்டு காண்பித்தார். அந்த பெண் உள்ளே சென்று ஆவணங்கள் உள்ள அறையில் செல்வது, பின்பு மூன்றுமணிநேரம் கழித்து வெளியே வருவது. வரும்போது கையில் கட்டு கட்டாக ஆவணங்களுடன் வெளியே வரும் காட்சிகள் தெரிகின்றது. என் கேள்வி இதுதான் யார் சொல்லி அவர் உள்ளேவந்தார். எப்படி அவரை உள்ளேவிட்டார்கள். அதுமட்டுமின்றி அவர் வரும்போது யாருமே அவரை வழிமறிக்கவில்லை என்பது எங்களுக்கு சந்தேகத்தை அதிகரிக்கசெய்கிறது. இது சாதாரண விஷயம் இல்லை. ‘என்னமோ நடக்குது மர்மமா இருக்குது’ மோடி வித்தையை காண்பிக்க ஆரம்பித்துள்ளார் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.



ஆட்சியர் நம்மிடம் தெரிவிக்கையில், “உதவி தேர்தல் அதிகாரி சம்பூர்ணம் ஓட்டு பெட்டி உள்ள அறைக்கு செல்லவில்லை. சீல் வைக்கபடாத ஆவணங்கள் உள்ள அறைக்குதான் சென்றுள்ளார்” என்று நம்மிடம் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தலைமை தேர்தல் கமிஷனுக்கு விளக்கமளித்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாஹூ “சம்பூர்ணா என்ற பெண் அதிகாரியை இடைநீக்கம் செய்துள்ளோம். மேற்படி அவர் ஏன் அங்கு போனார், யார் சொல்லி எதற்காக பாதுகாக்கபட்ட இடத்திற்கு போனார். என்று தீவிரமாக விசாரித்து கொண்டு இருக்கிறோம்” என்றார்.

 

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் “வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கின்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமா? என்ற மிகப்பெரிய கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. காலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த அனைவர் மீதும், அதற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள், நுழையவிட்டு பாதுகாப்பு கொடுத்தவர்கள் அனைவர் மீதும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் கழக நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் இரவு பகல் பார்க்காமல் விழிப்புணர்வுடன் இருந்து, வாக்கு எண்ணிக்கை மையங்களைக் கைப்பற்ற நினைக்கும் அராஜக அதிமுக ஆட்சியிடமிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். எல்லோரும் பயந்த மாதிரியே நடக்குது. ஓட்டு மிஷினில் கைவைத்துவிடுவார்களோ என்று எதிர்க்கட்சியினரும் மக்களும் பேசுவது கேட்க தொடங்கியிருக்கிறது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.