Skip to main content

ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் ஒருவர் சிக்கினார்! 

Published on 09/10/2019 | Edited on 09/10/2019

சேலம் அருகே, மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்த ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியதில், பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. 


சேலம் அன்னதானப்பட்டி சண்முகாநகரைச் சேர்ந்தவர் மோகன் (29). ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஆட்டையாம்பட்டி அருகே பெத்தாம்பட்டி பகுதியில் சாலையோரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளர் குலசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். சேலம் ஊரக டிஎஸ்பி உமாசங்கர் மேற்பார்வையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.


கொலை நடப்பதற்கு முதல் நாள், திருச்செங்கோடை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ் என்பவரும், அவருடைய நண்பர் ஒருவரும் மோகனை அழைத்துச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. கொலையுண்ட மோகன், தனியாக ரியல் எஸ்டேட் தொழில் தொடங்குவதற்கு முன்பாக சுரேஷிடம் தான் வேலை செய்து வந்துள்ளார். இதனால் தொழில் போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். 

salem real estate incident police arrested


இதையடுத்து, சுரேஷை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. காவல்துறை நெருங்குவதை அறிந்த சுரேஷ் திடீரென்று தலைமறைவானார். இதனால் அவருடைய கூட்டாளிகளுக்கு வலை விரித்தனர். இந்நிலையில், சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த மாவீரன் என்ற வாலிபர் சிக்கினார். அவரிடம் காவல்துறையினர் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மோகன் கொலையில் சுரேஷூக்கும், தனக்கும் தொடர்பு இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. 


கொலை நடந்த அன்று மோகனை அழைத்துக்கொண்டு திருச்செங்கோடு சென்றுள்ளனர். பின்னர் சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு, குடிபோதையில் அவரை கொலை செய்துள்ளனர். அதன்பிறகு, சடலத்தை ஆட்டையாம்பட்டி அருகே பெத்தாம்பட்டி பகுதியில் சாலையோரம் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இந்த கொலையில் ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ், மாவீரன் மட்டுமின்றி சேலம் மாநகரைச் சேர்ந்த 3 பேர் மற்றும் குமாரபாளையத்தைச் சேர்ந்த ஒருவர் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. கொலையில் ஈடுபட்ட கும்பலை கூண்டோடு பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 
 

salem real estate business man incident police arrested





 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.