Skip to main content

சிறுமிகளை சீரழித்த தந்தைக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை! சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!!

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

சேலத்தில், பெற்ற மகள்கள் என்றும் பாராமல் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சங்கீதப்பட்டியைச் சேர்ந்த ராஜா கவுண்டர் மகன் பெருமாள் (45). கூலித்தொழிலாளி. இவருக்கு 15 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவருடைய மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து, இரண்டு மகள்களையும் பெருமாள் தன்னந்தனியாக வளர்த்து வந்தார். 

salem pocso special court judgement

கடந்த 2015ம் ஆண்டு, இரண்டு பெண் குழந்தைகளும் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற்றனர். அப்போது குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த செவிலியர் ஒருவர், இதுகுறித்து சேலத்தில் உள்ள சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்தார்.


சைல்டு லைன் அமைப்பின் நிர்வாகி சில்வியா மற்றும் ஊழியர்கள், இரண்டு பெண் குழந்தைகளையும் மீட்டு, மாவட்ட குழந்தைகள் நல வாரியத்திடம் ஒப்படைத்தனர். குழந்தைகள் நலக்குழு நிர்வாகி சேவியர், சம்பந்தப்பட்ட பெண் குழந்தைகளின் தந்தை பெருமாளிடம் விசாரித்தார். அவர் பலமுறை தனது மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து சேவியர், பெருமாள் மீது சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.


புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பெருமாளை கைது செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை, சேலம் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிந்து, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் வியாழக்கிழமை (பிப். 20) தீர்ப்பு அளித்தார். பெற்ற மகள்கள் என்றும் பாராமல் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெருமாளுக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் வித்து தீர்ப்பு அளித்தார். அபராதம் கட்டத் தவறும்பட்சத்தில் மேலும் 6 மாதங்களுக்கு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பில் கூறியுள்ளார்.


இதையடுத்து பெருமாளை, நீதிமன்றத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.